பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து .
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே
சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.
-
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும்
அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப
வேண்டிய க...
10 ஆண்டுகள் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக