30 செப்டம்பர், 2008

29 செப்டம்பர், 2008

என் பாக்கியம்...

-அனாமிகா பிரித்திமா
கண்கள் முன் உங்களை...
வைத்திருக்கிறேன்...
ஒரு நொடி கூட முட மனதில்லை...
நீங்கள் மறையக்கூடாதே !...
நாசியில் இழுக்கிறேன் சுவாசம்...
நீங்கள் இருக்கும்...
இதயத்திற்கு...
இரத்த ஓட்டம் வேண்டுமே !...
செயற்கை புன்னகையை ...
ஒட்டி கொண்டு சிரிக்கிறேன்...
தங்கள் சிந்தனையால் சிரிக்க...
உதடுகள் மறுக்கிறதே !...
விரல்கள் உணவை எடுக்க மறக்கிறது !
வாய் அதை ஏற்க மறுக்கிறது !
என் நாவு ருசி இழந்து...
வருடங்கள் ஆனது !
உயிர் (நிங்கள்) இல்லா உடம்பு...
இருந்து என்ன பயன்?...
உங்கள் மடியில் உயிர் பிரியும்...
பாக்கியம் இல்லை...
உங்கள் கையிலாவது...
அது போகட்டுமே ...
அனு அனுவாய் சாவதை விட...
என்னை முழுதாய்...
கொன்றுவிடுங்களேன்...
அது என்...
பாக்கியமாக இருக்கட்டுமே...
என் பாக்கியம் ...
பாக்கியம் ...
-அனாமிகா பிரித்திமா (anamikapritima@yahoo.com)

26 செப்டம்பர், 2008

தேந்திரன்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?

பெற்றோருக்கு தெரியாமல் மோட்டர் சைக்கிளை எடுத்துச் சென்ற மாணவன் விபத்தில் சிக்கினான். மூளை செயலிழந்ததால் உயிரை காப்பாற்ற முடியாத நிலை. துக்கத்தை அடக்கிக் கொண்டு, அவனது உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர் பெற்றோர். மின்னல் வேகத்தில் அந்த மாணவனின் இதயத்தை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார் சென்னை போலீஸ் டிரைவர். காத்திருந்த டாக்டர்கள் குழு அபார வேகத்தில் செயல்பட்டு, அந்த இதயத்தை ஒரு நோயாளிக்கு பொருத்தி அவருக்கு மறுவாழ்வு அளித்தது. - திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவங்கள், பயங்கரவாதிகளின் குண்டுகள் எத்தனை உயிர்களை பறித்தாலும் மனிதாபிமானத்துக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது. நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த சம்பவம் பற்றிய கீழே...


திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரில் வசிப்பவர் டாக்டர் அசோகன் (44). இவரது மனைவி டாக்டர் புஷ்பாஞ்சலி(40). திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் 'மனீஸ் கிளினிக்' என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் தேந்திரன் (16). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான்.


கடந்த சனிக்கிழமை தேந்திரன் தன் தந்தையின் பைக்கை எடுத்துக் கொண்டு, அதே பகுதியில் வசிக்கும் நண்பன் மோகனை பார்க்க சென்றான். பார்த்து பேசிவிட்டு, வழியில் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். திருக்குமரன் நகரில் ஒரு மீன்பாடி வண்டி கட்டுமான பொருட்களுடன் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதை ஓவர்டேக் செய்து வலதுபுறம் வீடு இருந்த திசையில் திரும்ப தேந்திரன் முயன்றபோது, மீன்பாடி வண்டியில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி இடித்துவிட்டது. வண்டியில் மோதி கீழே விழுந்தான். தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டியது. உடனே மயங்கி விட்டான்.


அந்த ஏரியாவில் உள்ளவர்களுக்கு தேந்திரனை நன்றாக தெரியும். உடனே அவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அவனது அப்பாவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். தேந்திரனுக்கு நினைவு திரும்பவில்லை. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், தலையில் அடிபட்ட அதிர்ச்சியில் தேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டதாகவும், என்னதான் சிகிச்சை அளித்தாலும் மூளை மீண்டும் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினர். தேந்திரனின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள் என்பதால் விஷயத்தை புரிந்துகொண்டனர்.


இனி உயிர் பிழைக்க முடியாத தங்கள் மகனின் உடல், மற்றவர்களுக்காவது உயிர் கொடுக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தனர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க விரும்புவதாக அப்போலோ டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

நேற்று காலை தேந்திரனின் கண்கள், இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. கண்கள் சங்கர நேத்ராலயா கண் மருத் துவமனைக்கு அனுப்பப்பட்டன. சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் ஆகியவை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜெ.ஜெ.நகரில் உள்ள செரியன் ஹார்ட் பவுண்டேசனில் சிகிச்சை பெறும் ஒரு சிறுவனுக்கு பொருத்துவதற்காக தேந்திரனின் இதயத்தை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.


ஆபரேஷன் முடிந்த 20 முதல் 30 நிமிடங்களுக்குள் இதயம் இன்னொருவருக்கு பொருத்தப்பட வேண்டும். ஆனால், 20 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். சென்னை நகர டிராபிக் நெரிசலில் இது சாத்தியமே இல்லை. எனவே போலீஸ் உதவ முடியுமா என்று விசாரித்தனர். அடிஷனல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உடனே உதவ முன்வந்தார். ஆம்புலன்ஸ் ரெடி பண்ணுமாறும், அதை நெரிசலில் சிக்காமல் அழைத்துச் செல்ல ஹ¨ண்டாய் போலீஸ் காரை ஒரு ஏ.சி.யுடன் அனுப்பி வைப்பதாகவும் சுனில் கூறியுள்ளார். வழி நெடுக உள்ள அனைத்து சிக்னல்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.


ஆபரேஷன் முடிந்ததும் டாக்டர்கள் தேந்திரனின் இதயத்தை சிறிய ஐஸ் பெட்டியில் எடுத்துக் கொண்டு 2.50 மணிக்கு வெளியில் வந்தனர். அங்கே நின்றிருந்த அவனது தந்தை ஐஸ் பெட்டியை பார்த்ததும் துக்கம் தாங்காமல் துணியால் வாயை மூடிக் கொண்டார். ஆம்புலன்ஸ் ரெடியாக நின்றிருந்தது. அதை கவனிக்காத டாக்டர், அதற்கு முன் நின்றிருந்த போலீஸ் காரின் கதவை திறந்து ஏறி அமர்ந்து, ‘வேகமா போங்க..!’ என்று சொல்ல, உள்ளே இருந்த உதவி கமிஷனர் மனோகரன் உடனே சுதாரித்துக் கொண்டு, டிரைவர் மோகனுக்கு ஜாடை காட்ட, உடனே கார் மின்னல் வேகத்தில் பறந்தது.


ஜெ.ஜெ.நகர் செரியன் மருத்துவமனையில் டாக்டர்கள் குழு ரெடியாக இருந்தது. ஒன்பது வயது சிறுவன் மாற்று இதயம் பொருத்துவதற்காக ஆபரேஷன் தியேட்டரில் காத்திருந்தான். போலீஸ் கார் வந்ததும், அப்போலோ டாக்டர் ஐஸ் பெட்டியுடன் உள்ளே ஓடிவந்தார். 6 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. தேந்திரனின் இதயத்தை டாக்டர்கள் குழு வெற்றிகரமாக 9 வயது சிறுவனுக்கு பொருத்தியது.‘தேந்திரன்’ என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? - ‘இதயத்தை கொள்ளை கொள்பவன்’

‘10 நிமிடத்தில் பறந்தேன்’

அந்த பரபரப்பான நிமிடங்கள் பற்றி கார் டிரைவரும் போலீஸ்காரருமான மோகன்
நானும் உதவி கமிஷனர் மனோகரனும் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிச் செல்ல தயாராக இருந்தோம். எதிர்பாராமல் டாக்டர்கள் எங்கள் காரில் ஏறிவிட்டனர். ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால் ஏசி ஆட்சேபிக்கவில்லை. ஒருவருக்கு உயிர் கொடுக்க போகிறோம் என்ற பதற்றம் அந்த நிமிடத்தில் தாக்கியது. காரை வேகமாக ஓட்டினேன். கிட்டத்தட்ட 120 கி.மீ வேகத்தில் கார் பறந்தது.

அண்ணாசாலை, வி.என்.சாலை, பர்கிட் ரோட்டில் ஒரு வழிப்பாதையாக இருந்தாலும், போலீசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்ததாலும் எதிர் திசை வழியாக, மேட்லிரோடு, தி.நகர் பஸ் நிலையம், புதிய மேம்பாலம், லயோலா கல்லூரி, அண்ணா வளைவு, அண்ணாநகர் ரவுண்டானா வழியாக ஆஸ்பிடலை அடைந்த பிறகுதான் வாட்சை பார்த்தேன். 10 நிமிடம்தான் ஆகியிருந்தது. டாக்டர் நன்றி சொல்லிக் கொண்டே மருத்துமனைக்குள் ஓடினார். அதன் பிறகுதான் எனக்கு நிம்மதி.


இதுவரை இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டியதே கிடையாது. அருகில் இருந்த உதவி கமிஷனர் மைக் மூலம் போக்குவரத்து போலீசுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே வந்ததால், ரோடு கிளியராக இருந்தது. இது என்னால் மறக்கவே முடியாத நாள்’’

படம்:
படம் 1: விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த மாணவன் தேந்திரன்.
படம் 2: மகனை பறிகொடுத்த டாக்டர் தம்பதி.
படம் 3: ஐஸ் பெட்டியில் இதயத்தை வைத்து அவசரமாக எடுத்துச் செல்கின்றனர்.
படம் 4: ஆம்புலன்ஸ் நிற்பதை கவனிக்காமல், போலீஸ் காரில் இதயத்துடன் புறப்படுகின்றனர்.
( நன்றி: தினகரன் )
"ஹிதேந்திரனின் பெற்றோர் செய்த தியாகத்துக்கு ஈடு இணையே கிடையாது" - அமைச்சர் ஸ்டாலின்

25 செப்டம்பர், 2008

சுதந்திரச் சதுக்கத்தில் விடுதலை கோரிக்கை..


இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் மெழுகுவர்த்தி ஏந்தியப் பேரணி
இடம் : 'மெர்டேக்கா' சதுக்கம்
திகதி : 27 செப்தெம்பர் 2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு மணி 7.00
பி.கு: அனைவரும்,மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃபின் சிறியக் கொடியையும் உடன் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இண்ட்ராஃப் மக்கள் சக்தி மீண்டும் ஒரு பேரணிக்கு தயாராகி விட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக கமுந்திங் தடுப்புக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலைக்காக அரசாங்கத்திடம் பலவகையில் வேண்டுகோள் விடுத்திருந்தும், அனைத்தும் விழலுக்கு இழைத்த நீராய் பயனற்றுப் போனது.
அதே சமயம், சுயலாபத்திற்காகவும் அரசியல் நோக்கத்திற்காகவும் இண்ட்ராஃப் தலைவர்களின் விடுதலை குறித்து அண்மையில் பல தரப்பினர் பேசிக் கொண்டு வருவதையும், அரசாங்கம் அவர்களுக்கு செவிசாய்ப்பதுபோல் பாசாங்கு காட்டுவதையும் கண்டு நாம் ஏமார்ந்துவிடக் கூடாது. அவர்கள் நினைத்தால் ஆதரிப்பார்கள், அவசியம் இல்லாத பட்சத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள்.
'மக்கள் சக்தி' என்று வரும்பொழுது மக்கள்தான் களத்தில் இறங்கி தங்களின் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும். எனவே, நாம் அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும்!
எதிர்வரும் 27 செப்தெம்பர் மாதம் மறவாமல் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அனைவரும் மெர்டேக்கா சதுக்கத்தில் அமைதியான முறையில் ஒன்று கூடுவோம். இண்ட்ராஃப் தலைவர்கள், ராசா பெத்ரா மற்றும் பிற இசா கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி அரசாங்கத்தை வலியுறுத்துவோம், வாரீர்...
இப்பேரணியில் கலந்துக் கொள்ளவிரும்புபவர்கள் அவரர் மாநில ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புக் கொண்டு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மறவாமல் ஆரஞ்சு நிற உடை அணிந்துக் கொண்டு, மெழுகுவர்த்தியையும் இண்ட்ராஃப் சிறு கொடியையும் உடன்கொண்டு வாருங்கள். சாலை விதிமுறைகளை மீறாமல் கண்ணியமாக நடந்துக் கொள்ளும்படி ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டம் தொடரும்...
ஓலைச்சுவடி"

ராஜபக்சே வருகையை எதிர்த்து நியூயார்க்கில் தமிழர்கள் பேரணி

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த பேரணியை நடத்தியது. இதில், அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
டொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக பேசியும், விமான குண்டு வீச்சு மூலம் 2,25,000க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியும், இனப்படுகொலையை நடத்தி வரும் ராஜபக்சேசவின் கோர முகத்தை ஐ.நா. சபையின் முன்பு தோலுரித் காட்ட இந்தப் பேரணியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் வானொலிகள், டிவிகள் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்தன.கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் உருத்திரகுமாரன், நாதன் ஸ்ரீதரன், உஷா ஸ்ரீகந்தராஜா, வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

போராட்டத்திற்கு நியூயார்க் காவல்துறை முழு ஒத்துழைப்பும் அளித்ததாக ஏற்பாட்டாளர்கள் ெதரிவித்தனர். தமிழர்கள் நடத்திய இந்த பிரமாண்டப் பேரணியை படம் பிடிக்க பெரும் திரளான டிவி கேமராமேன்கள், பத்திரிக்கை புகைப்படக்கார்ரகள் குவிந்தனர். பன்னாட்டு செய்தியாளர்களும் செய்தி சேகரித்தனர்.
திபெத்தியர்களும் போராட்டம் ...
தமிழர்கள் போராட்டம் நடத்திய அதே பகுதியில், சீன அரசைக் கண்டித்து திபெத்தியர்களும் பெரும் திரளாக கூடி போராட்டம் நடத்தினர். தமிழர்களின் பேரணிக்கும் இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல ஈரான் அரசுக்கு எதிராக திரண்ட யூதர்களும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

23 செப்டம்பர், 2008

அவர்கள் அப்படித்தான்

முதியோர் இல்லங்கள்
குஞ்சுகள் மிதித்து கோழிகள் செத்ததுண்டா?
உண்டு. எங்கே?
முதியோர் இல்லங்களில்.

இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் குறைந்தபட்சம் முதியவர் ஒருவராவது இருப்பார்கள். பேரன்களால் பெருசு என்றும், மருமகளால் கெழம் என்றும், மகனின் பார்வையில் எரிச்சலை ஏற்படுத்தும் காட்சிப்பொருளாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் முதியவர்களைப் பற்றிதான் இந்த வலைப்பதிவு. வாழவைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற தலைக்கணத்தில் சில குடும்பத்தில் அவர்களின் உணர்வுகளை பெற்ற பிள்ளைகளே சாகடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு, கணவன் ஒருவன் தனக்கென்று வந்தபின் தனது ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் (மாமனார், மாமியார்) ஒரு தடை என்றும் தனிப்பட்ட ஆசாபாசங்கள் மட்டுமே முக்கியம் என்று சில பெண்கள் நினைப்பதே எல்லா பிரச்சினைக்கும் முக்கிய காரணம்.

மாமியார், மாமனார், மருமகள் இடையே காரணமற்ற கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். இதுயாவும் இயற்கையே. ஒத்த கருத்துகொண்டவர்களை அருகில் இருந்து பார்ப்பது அபூர்வம் தான். அதனால் கருத்துவேறுபாடுகள் பல இருந்தாலும், அலுவலகப் பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீட்டிற்கு வருகிற ஆணிடம் புதியதாக ஒரு பிரச்சினையை காதில் ஓதி விடுவதே பிரச்சினையின் ஆரம்பம். கணவனிடம் சொன்னதை தனது தாய் வீட்டிற்கும் ஃபோன் செய்து சொல்லி அழுவது பிரச்சினையின் உச்சகட்டம். இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஒன்றாகி மனவருத்தம், கருத்துவேறுபாடு, எதிரியாக பார்க்கும் மனோபாவம், போன்ற பல காரணங்களால் வீட்டிலுள்ள முதியவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

குடும்பம் என்றால் பிரச்சினை இருப்பது இயற்கை. அதனால் மற்றவர்களுக்காக நம்மை தியாகம் செய்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. (தியாகியாக யாராவது இன்றைய காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி) ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்களின் மனது புண்படும்படி நடந்துக்கொள்வது, அவர்களை சுமையாகவே நினைப்பது, இருப்பதற்கு இல்லாமல் இருக்கலாம் என்று பேசி அவர்களின் மனதை காயப்படுத்துவது போன்ற இழிவான செயல்களுக்குப்பதில் அவர்கள் அப்படித்தான் அதனால் நாம் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு எண்ணத்தை மருமகள் நினைக்கும்போது அங்கு பிரச்சினை ஏற்படவோ அவர்களை எதிராக பார்க்கும் மனநிலை ஏற்படவோ ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்காது. ஆக இருக்கும் வாழ்க்கையை இன்பமாக கழிப்பதற்கு நம் மனதை நாமே பக்குவப்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை.

வீட்டிலுள்ள முதியவர்களிடமும் (மாமியார், மாமானாரிடம்) தவறுகள் இருக்கலாம். எரிச்சலூட்டும்படியே அவர்கள் நடந்துக்கொள்ளலாம்.

இருப்பினும் வேகமாக சென்றுகொண்டிருக்கும் இன்றைய நவீன உலகத்தில் உணவு தயாராகவில்லையா, பாஸ்ட் ஃபுட்க்கு சென்றுவிடலாம். குழந்தையை கவனிக்க முடியவில்லையா, க்ரீச்சில் (மழலையர் காப்பகம்) சேர்த்துவிடலாம். வீட்டிலுள்ள பெரியவர்களால் தொல்லையா,அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று எண்ணி வேகமாக செல்லும் நவீன வாழ்கை முறைக்கு ஏற்றதுபோல நம் மனதையும் மாற்றிக்கொள்வது தவறு. காரணம் பெற்றவர்களை, நம்மைப் படிக்கவைப்பதற்காக முன்றொரு காலத்தில் உழைத்தவர்களை, உணவை கொடுத்து நம்மை ஆளாக்கியவர்களுக்காக, நோய் வந்தால் செலவு செய்து ஆரோக்கியமாக்கியவர்களை ஒரு சுமையாக நினைப்பவர்கள் நிச்சயமாக துரதிஷ்டமானவர்களே.

காரணம், சொத்துக்காக பெற்றோர்களை வீட்டில் வைத்துக்கொள்கிற சில ஆண்களும், முதியவர்களின் குறைந்தபட்ச தேவையான வயிறார உணவைக்கூட சரியாக கொடுக்காத சில பெண்களும், இன்றைக்கும் சில குடும்பங்களில் இருக்கிறார்கள்.

எவ்வளவுதான் தம்பதிகள் படித்திருந்தாலும், கைநிறைய சம்பாதித்தாலும் முதியவர்களை சுமையாக நினைத்து முதியோர் இல்லங்களில் சேர்ப்பவர்களை ................................... (எதை வேண்டுமானாலும் போட்டு நிரப்பிக்கொள்ளலாம்)

சருகுகள் மீண்டும் மலராகாது...

ஆனால் மலர்கள் சருகுகள் ஆகாதோ?


Janaki Prabu, செப்டம்பர் 22, 2008 12:12:05 PM IST அன்று வெளியிட்டது #

18 செப்டம்பர், 2008

வெற்றியின் ரகசியம்

அதற்காக 10 எளிய வழிகள்.

1 தன்னம்பிக்கை

2 லட்சியம்


3 முயற்சி


4 கற்றுக்கொள்ளுங்கள்


5 உழைப்பு


6 தெளிவுறுங்கள்


7 குறுக்கீடு


8 தனித்துவம்


9 கலந்தாய்வு

10 பொறுப்பேற்பு

வா‌ழ்‌க்கை‌க்கான ம‌ந்‌திர‌ம்..

வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள்...

எல்லாவற்றையும் நாம் ஒருபோல் பார்க்க வேண்டும்... துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சரி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. துன்பம் வரும்போது அழுகை வராமல் இருந்தால் சரிதான் என்பதல்லவா நமது நிலைமை.

அது எப்படி துன்பம் வரும்போது அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கவோ, இன்பம் வரும்போது வானத்தை தொட்டு வருவது போல் பறப்பதோ இல்லாமல் நம்மால் இருக்க முடியும்.

அதற்கு ஒரு மந்திரம் உண்டு. 3 வார்த்தை மந்திரம் தான் அது. இதனை என் வாழ்க்கையில் நான் பல முறை கடைபிடித்துள்ளேன். பல சமயங்களில் இடி விழுந்தது போன்ற பிரச்சினைகளில் இந்த மூன்று வார்த்தையை உச்சரித்த வண்ணம் இருப்பேன். அதுவே எனக்கு பலம் என்றும் எண்ணியுள்ளேன்.

அதை உங்களுக்கும் கூறுகிறேன். முயற்சித்துப் பாருங்கள். இதற்கு ஒரு கதை உண்டு. (பல ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இன்று ஒரு தகவலில் கேட்டது)

ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.

துறவி கிளம்பும்போது... மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார்.

மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பல காலங்கள் கழிந்தன. அப்போது,

ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோக, அடிமை சாக
மா ஈரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே!

இ‌ந்த பாட‌லி‌ன் பொரு‌ள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டி‌ரு‌ந்த வேலை‌யி‌ல் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!''

இ‌ப்படியான ஒரு வேதனை‌த் தா‌‌ன் அ‌ந்த ம‌ன்னனு‌க்கு‌ம் ஏ‌ற்ப‌ட்டது. அ‌ப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.

அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் "இதுவும் கடந்து போகும்" என்று 3 வார்த்தைகள் இருந்தன....

எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி... அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை.

ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

:- தமிழ் உலகம்

வைரமுத்துவின் சுனா‌மி க‌விதை

ஏ கடலே
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன் முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்
ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா
உன் அலை எத்தனை விதவைகளின் வெள்ளைச் சேலை?
உன் மீன்களை நங்கள் கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை நீ கூறுகட்டுகிறாய்?
அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?
பிணங்களை அடையாளம் காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள் பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதே மரியாதை போய்விட்டது
பறவைகள் மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை
இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்.

பெரியார் சொன்னது

கடவுளை மற மனிதனை நினைஇது உங்களின் தாரக மந்திரமா?
மனிதனை நினைக்கும் அளவிற்குமனிதன் புனித ஆத்மா
கிடையாதுவிலங்கினமும் அஞ்சி பயந்து நடுங்கும்அளவிற்கு மிருகதனமானவன் மனிதன் .உலகின் நினைத்து பார்க்க முடியாதஅளவிற்கு கொடுமைகள் புரியும்மனிதனை ஏன் நினைக்க சொல்கிறீர்கள்?மனிதனுக்கு மனிதாபிமானம் உண்டா?பசிக்கு உணவு கொடுக்கும் மனிதன் உண்டா?சாபிடும்போது உணவை பிடுங்கும் மனிதன் தான் உண்டுதாகத்திற்கு நீர் கூட தரவேண்டாம் குடிக்கும் நீரைதட்டி பறிக்காமல் இருந்தால் போதாதா?இப்படி இருக்கும் மனிதனைஏன் நினைக்க வேண்டும் ?அவனை நினைப்பது கொடுமை .....அவனை நினைப்பது மூடத்தனம் .கடவுளை நினை என்று நான் கூறவில்லைஅற்ப மனிதனை நினைக்காதே என்று தான் நான் கூறுகிறேன் .கடவுள் இல்லை இது உங்கள் கூற்று .ஆக இல்லாத ஒன்றை பற்றி நாம் பேசவேண்டாம் .இருக்கும் மனிதனை நினைக்கவும் வேண்டாம்காரணம் மனிதன் கடவுளை விடகொடுமையானவன் ....கடவுளை விட மோசமானவன்கடவுளை விட மூர்கதனமானவன் .....மனிதன் கடவுளை விட மிருகதனமானவன்அவனை நினைப்பதை விடஇல்லாத கடவுளை நினைப்பது மேல் .............

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம்.
ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

தனிமை

தினசரி
தேதித்தாள்
கிழித்து எறிந்தபின்
அட்டை மட்டும்
தனிமையில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
முதியோர் இல்லத்தில்
இன்பா

15 செப்டம்பர், 2008

அண்ணாவுக்கு வயது 100!




பேரறிஞர்,

  • தென்னாட்டு சாக்ரடீஸ் என அனைத்துக் கட்சியினராலும், மக்களாலும் அன்புடன் அழைக்கப்படும், திமுகவை தோற்றுவித்தவரும், திராவிட இயக்க ஆட்சிகளின் முதல் முதல்வருமான மறைந்த பேரறிஞர் அண்ணாதுரைக்கு இன்று 100 வயதாகிறது. இதையொட்டி அனைத்து திராவிட கட்சிகளும், இயக்கங்களும் அண்ணாவின் நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றன.காஞ்சிபுரம் தந்த அருமைத் தலைவர்தான் அண்ணா. சி.என். அண்ணாதுரை என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் அருமையான, பாசத்துக்குரிய அண்ணாவாக அறியப்பட்டவர் அண்ணாதுரை.தென்னகத்தில் அமைந்த முதல் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையின் முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் அண்ணா. மிகச் சிறந்த எழுத்தாளர், திறம்பட்ட பேச்சாளர், தமிழைப் போலவே ஆங்கிலத்தையும் அட்சர சுத்தமாக பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர், சிறந்த நிர்வாகி, சீரிய தலைவர், நேர்மைக்கு பேர் போனவர் என்று பன்முகம் கொண்டவர் அண்ணா.1909ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, காஞ்சிபுரத்தில் பிறந்தார் அண்ணா. அவருடைய தந்த நடராஜ முதலியார். தாயார் பங்காரு அம்மாள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார் அண்ணா. இதனால் அவருடைய சகோதரி ராஜாமணியே, அண்ணாவுக்கு தாயும் ஆனார்.காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா, படிப்பு முடிந்ததும், நகராட்சி அலுவலகத்தில் கிளர்க் வேலையில் சேர்ந்தார். 1934ம் ஆண்டு சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில் பிஏ (ஹானர்ஸ்) படிப்பை முடித்தார்.அதன் பின்னர் அதே கல்லூரியில் எம்.ஏ. (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்ட மேற்படிப்பை முடித்தார். பின்னர் அங்கு சிறிது காலம் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அவருக்கு இதழியலிலும், அரசியலிலும் ஈடுபாடு ஏற்பட்டது.மாணவப் பருவத்திலேயே அண்ணாவுக்கு சொற்பொழிவில் அசாத்திய திறமை இருந்தது. தமிழிலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக பேசக் கூடிய ஆற்றலைப் பெற்றார்.கல்லூரிப் படிப்பை முடித்ததும் பாலபாரதி இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நவ யுவன் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.பின்னர் ஜஸ்டிஸ் என்ற ஆங்கில வார இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார். ஈரோட்டிலிருந்து வெளியான விடுதலை வார இதழின் ஆசிரியர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார் நிறுவிய இதழ்தான் விடுதலை.1942ம்ஆண்டு திராவிட நாடு என்ற பெயரில் சொந்த வார இதழை தோற்றுவித்தார் அண்ணா. தனது எழுத்தாற்றலால் இந்த இதழுக்கு பெரும் திரளான வாசகர்களை ஈர்த்தார். காஞ்சி என்ற இதழையும் அவர் ஆசிரியராக இருந்து கவனித்தார்.1957ம் ஆண்டு ஹோம்லேண்ட் என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1966ம் ஆண்டு ஹோம்ரூல் என்ற ஆங்கில இதழையும் நிறுவினார்.மிகச் சிறந்த சிறுகதைகளையும், நாவல்களையும் அண்ணா படைத்தார். அவருடைய கதைகளில் இடம் பெற்ற வசனங்கள் வெகு வேகமாக பிரபலமாயின. எதுகை மோனை நடையுடன் அவர் பயன்படுத்தி மிடுக்கான வசனங்கள், உவமைகள் பிரபலமாகின. கதை, வசனத்திலும் அவர் தேர்ச்சி பெற்றார். நாடகங்களிலும் நடித்தார்.பேச்சாற்றலில் சிறந்து விளங்கிய அண்ணாவுக்கு பெரும் ரசிகர் கூட்டம் திரண்டது. தன் முன் திரண்டு நிற்கும் கூட்டத்தை, தனது பேச்சாற்றலால் அப்படியே, ஆடாமல், அசையாமல் கட்டிப் போடும் வல்லமை அவரது வார்த்தைகளில் இருந்தது.சென்னை கடற்கரைகளில் அண்ணாவின் கூட்டங்களுக்கு திரண்ட கூட்டம் பெரும் சாதனையாக இன்றளவும் இருந்து வருகிறது. அதிலும் அவரது பேச்சைக் கேட்க முன்வரிசையில் அமர பெரும் தள்ளுமுள்ளே நடக்குமாம்.பெரியாருடன் இணைந்தபின்னர் அண்ணாவின் அரசியல் வாழ்வு மேலும் மெருகேறியது. பெரியாருடன் இணைந்து, நீதிக் கட்சிைய வலுப்படுத்த உதவினார் அண்ணா. பின்னர் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தபோது அண்ணாவைப் பின்பற்றி பலர் திராவிடர் கழகத்திலிருந்து வந்தனர் - உருவானது திராவிட முன்னேற்ற கழகம்.1957ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அண்ணாவின் திமுக போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.சட்டசபையில் திமுக நுழைந்தது, சட்டசபையில் அண்ணாவின் பேச்சுக்கள் சகாப்தம் படைத்தவை. இன்றளவும் அனைவரும் மேற்கோள் காட்டக் கூடிய அளவுக்கு அவை வல்லமையுடன் உள்ளன.1967ம் ஆண்டு அண்ணா தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அதேபோல செனனை மாகாண சட்ட மேலவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1967ம் ஆண்டு பிப்ரவரியில்நடந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுக்கு அமோக வெற்றி. அண்ணா முதல்வரானார். 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வர் பதவியில் நீடித்தார் அண்ணா. ஆனாலும், அவருடைய எளிமை, நிர்வாகத் திறமை, சுறுசுறுப்பான செயல்பாடுகள் ஆகியவற்றால் மிகச் சிறந்த முதல்வராக உயர்ந்தார் அண்ணா.ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் எனது அரசு உற்ற நண்பனாக விளங்கும் என்றார் அண்ணா. ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு தருவேன் என்றும் உறுதியளித்தார்.அண்ணாவின் பதவிக்காலத்தில், சென்னையில் 1968ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் உலகத் தமிழ் மாநாடு சீரிய முறையில் நடந்தேறியது.உலகத் தமிழர்களின் உன்னத தலைவராக விளங்கிய அண்ணா, 1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி மறைந்தார். அவரது புகையிலை பழக்கமே அவரது உயிருக்கு எமனாக மாறியது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்வேறு சிகிச்சைகளுக்குப் பின்னரும் கூட பலனளிக்காமல் மறைந்து போனார்.சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த இறுதிச் சடங்கின்போது ஒன்றரை கோடி பேர் திரண்டனர். இது ஒரு உலக சாதனையாகும். இன்றளவும் எந்த உலகத்தலைவரின் இறுதிச் சடங்குக்கும் இந்தளவு மக்கள் கூடியதில்லை.
  • அண்ணாவின் சாதனைகள்அண்ணாவின் பெரும் சாதனையாகவும், அவருக்கு இன்றளவும் புகழ் சேர்ப்பதாகவும் உள்ளது, சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றியமைத்ததுதான்.அதேபோல காங்கிரஸ் ஆட்சிகளுக்கு தமிழ்நாட்டில் முற்றுப் புள்ளி வைத்ததும் அண்ணாதான். திமுக ஆட்சிக்கு வந்த அன்று முதல் இன்று வரை காங்கிரஸால் ஆட்சிப் பீடத்தை தொடக் கூட முடியாத நிலை உருவாகி விட்டது.மத்தியில் குவிந்து கிடந்த அதிகாரங்களை மாநிலங்களுக்கும் கணிசமான அளவில் கொண்டு வந்த சாதனையையும் அண்ணாதான் படைத்துள்ளார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வாதத்ைத டெல்லியிலே எடுத்து வைத்து அதை நிரூபித்து, தென்னக மாநிலங்களுக்கும் நிறைய அதிகாரங்கள் கிடைக்க வழி செய்தவர் அண்ணா.ஓரிரவு என்ற நாடகத்தை ஒரே நாள் இரவில் எழுதி முடித்தார் அண்ணா. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாக்கப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது.அண்ணாவின் எழுத்துக்கள்அண்ணாவின் பொன் எழுத்துக்களில் உருவான வேலைக்காரி, ஓரிரவு, ஆரிய மாயை, கம்பரசம் உள்ளிட்ட அனைத்துமே பெரும் புகழ் பெற்றவை.கம்ப ராமாயணத்தை விமர்சித்து அவர் எழுதிய கம்பரசம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதேபோல பிராமண, ஆரிய ஒப்பீட்டு ஆய்வாக அமைந்த ஆரிய மாயை நூலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.அண்ணாவின் பொன்மொழிகள்வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறதுஒன்றே குலம், ஓருவனே தேவன்கத்தியை தீட்டாதே, புத்தியைத்தீட்டுகடமை கண்ணியம் கட்டுப்பாடு தெளிவு துணிவு கனிவுமாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டுவெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்சட்ட சபையில் தப்பு தாளங்கள் போடாதீர்பானுமதி ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல, நானும் முற்றும் துறந்த முனிவனுமல்லதேடிச் செல்வதில்லை, நாடி வந்தால் விடுவதில்லைஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறதுபெரியாரின் சிஷ்யராக விளங்கிய அண்ணா இன்றைய திராவிட இயக்க அரசியல்வாதிகள் பலருக்கும் குருவாகவும் திகழ்கிறார்.கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய இரு பெரும் அரசியல் தலைவர்களுக்கு அன்புள்ள அண்ணனாகவும், ஆசிரியராகவும், தலைவராகவும் திகழ்ந்தவர் அண்ணா. அண்ணா இருக்கும் வரை இந்த இரு பெரும் தலைவர்களும் ஓரணியில், ஒருமித்து செயல்பட்டு வந்தனர். அண்ணாவின் மறைவு இவர்களை இரு துருவங்களாக்கி விட்டது. இந்த இரு துருவங்களும் பல அரசியல் நட்சத்திரங்களை உருவாக்கிய பெருமைக்கும் உரியவர்களாகி விட்டனர்.
http://www.tamilcircle.net/

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்  

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள்.
சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள் நடக்கின்றன.
மற்றொருபுறம் ஒபாமா நிறுத்தப்பட்டிருப்பதை வைத்து அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டதெனவும், கருப்பின மக்களின் விடுதலையில் மற்றுமொரு மைல்கல் இது எனவும் சிலர் பேசுகிறார்கள். இங்கேயும் முதல் தலித் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், முதல் தலித் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முதலானவர்கள் நியமிக்கப்பட்டபோது குறிப்பாக தலித் அறிவுத்துறையினர் அப்படித்தான் கொண்டாடினார்கள். ஆனால் நடைமுறை உண்மை என்னவோ தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரிப்பதையே காட்டுகின்றது.
ஒரு சில கருப்பினத்தவரோ, தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும், சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.
அமெரிக்காவிலும் அப்படித்தான். ஒபாமா, கிளிண்டன், மெக்கைன் எவரும் தங்களது பிரச்சார உரைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பை நெருடும் வண்ணம் பேசுவதில்லை. ஈராக் போரோ, பாலஸ்தீனப் பிரச்சினையோ, உள்நாட்டில் வரிவிலக்கோ எதையும் அந்த ஆடுகளத்தின் விதிகளுக்கு உள்பட்டுதான் பேசமுடியும். ஒருவேளை ஒபாமா வென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி வீழ்ந்து விட்டதாகப் பொருளில்லை.
அமெரிக்கச் சமூகத்தின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் நிறவெறியானது தோலின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல. அது சமூகக் கட்டுமானம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் விளைவால் அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தைக் குவித்துவரும் வேளையில் அங்கு ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். ஏழைகளில் பெரும்பான்மையினர் "இயல்பாகவே' கருப்பின மக்கள்தான் என்பதால் அங்கே நிறவெறியும் இயல்பாகத்தான் இருக்கிறது.
வர்க்கக் கொடுங்கோன்மையின் உருத்திரிந்த வெளிப்பாடாகவும், அதனை நியாயப்படுத்தும் முகாந்திரமாகவும், அதனைப் பாதுகாக்கும் கவசமாகவும் அங்கே நிலவுகிறது நிறவெறி.
கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கச் சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலெட்ஜ் பதிப்பகத்தின் ஒயிட் ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர். பேகின், ஹெர்னன் வெரா மற்றும் பினார் பாதர்.
சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
···
உலக மேலாதிக்கத்தையே ஜனநாயகத்தின் பெருமையாக பீற்றித்திரியும் இடமான வாஷிங்டனிலிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிடத்தையும், காலனிகளை உருவாக்கும் அமெரிக்கத் தாகத்தை சுதந்திர வேட்கையாக மாற்றி அதனை நினைவுகூறும் வண்ணம் மான்ஹாட்டனில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் சுதந்திரதேவி சிலையையும் கட்டி எழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கருப்பின அடிமை மக்கள். இதற்கான கூலிகூட அம்மக்களுக்குத் தரப்படாமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் தரப்பட்டது.
அமெரிக்கப் பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் இரத்தம் கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிறவெறியினுடைய மூலம் ஐரோப்பாவென்றாலும், அதை வைத்தே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்.
கி.பி 1600களின் மத்தியில் ஆப்பிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல பிடித்து வரப்பட்டார்கள் ஆப்பிரிக்க மக்கள். இதே காலத்தில்தான் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல பின்னர் வந்த லத்தீன் அமெரிக்கர்களும், ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதுதான் நின்றுகொண்டிருந்தன.
இருபதாம் நூற்றாண்டில் கருப்பின மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் 195060களில் நடந்த சிவில் உரிமை இயக்கத்தின் விளைவாக அதிபர் லிண்டன் ஜான்சன் காலத்தில் நிறவெறிக் கொடுமைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. இதற்கு முன்னர் இவையனைத்தும் சட்டபூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.
சட்டம் மாறினாலும் நடைமுறை மாறிவிடுமா என்ன! புதிய சட்டங்களின் கீழ் வெள்ளை நீதிபதிகள் வெள்ளை நிறவெறிக்கு ஆதரவான பொழிப்புரையுடன் "நீதி' வழங்குகின்றனர். நமது நாட்டில் வன்கொடுமைச் சட்டம் எப்படி தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையைத் தண்டிப்பதில்லையோ அப்படித்தான் அங்கும்.
வெள்ளைப் பெருமிதத்தின் சின்னமாகக் கருதப்படும் "தேசியக் கூட்டமைப்பு போர்க்கொடி' இன்றும் தெற்கு கரோலினாவில் பறந்து கொண்டிருக்கிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் பறந்த தினத்திற்கு மற்ற மாநிலங்கள் விடுமுறை அளித்தாலும் இம்மாநிலம் மட்டும் அதை அங்கீகரிக்கவில்லை. இவற்றை எதிர்த்து கருப்பின மக்கள் இன்றும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் நடைபெறும் குற்றங்களில் கணிசமானவை நிறவெறிக் குற்றங்களே. குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் கருப்பின மக்களே அதிகம். இதுபோக வறுமை, வேலையின்மை, தகுதியற்ற வேலைகள் முதலியவற்றில் வெள்ளையர்களைவிட கருப்பின மக்களே அதிகம் இருக்கிறார்கள்.
ஊரும் சேரியும் தனித்தனியே பிரிந்திருக்கும் அநாகரிகம் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானதல்ல. அமெரிக்காவின் பெருநகரங்களில் வேண்டுமானால் குடியிருப்புகள் கலந்திருப்பது ஓரளவுக்கு இருக்கலாம். அங்கும்கூட, வர்க்கரீதியான பிளவுக்குள் மறைந்துகொண்டு உயிர்வாழ்கிறது நிறவெறி. நமது மாநகரப் பகுதிகளின் குடிசைவாழ் ஏழைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் அதிகம் என்பது போல அமெரிக்க நகர்ப்புறச்சேரிகளில் கருப்பின மக்களே அதிகம்.
மற்றபடி உண்மையான அமெரிக்காவோ சிறு நகரங்களில்தான் கட்டுண்டு கிடக்கிறது. இங்கு வெள்ளையர்களும் கருப்பர்களும் சேர்ந்துவாழ்வது என்பதை இன்றும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
பல நூறு வெள்ளையர்கள் வாழும் "டுபுக்கீயு' நகரின் வளர்ச்சித்திட்டத்தை அமல்படுத்த தொழிலாளிகள் தேவைப்பட்டதால், சில நூறு கருப்பர்களை குடியமர்த்தலாம் என்று அந்நகர நிர்வாகம் 90களின் ஆரம்பத்தில் தீர்மானித்தது. நகரம் விரிவடைவதற்கேற்ப அதன் பராமரிப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு கருப்பினத் தொழிலாளிகள் தேவைப்படுவதால் பல அமெரிக்க நகரங்களில் இப்படித்தான் திட்டமிடுகிறார்கள்.
ஆயினும் அந்நகரத்தின் வெள்ளையர்களோ இதனை ஏற்காமல் கலவரம் செய்தார்கள். "கருப்பர்கள் வந்தால் குற்றங்கள் அதிகரிக்கும், நகரின் சமூகநலத் திட்ட ஒதுக்கீட்டை கருப்பர்களே அபகரிப்பார்கள், அதிகப் பிள்ளைகளை அவர்கள் பெற்றுக் கொள்வதால் நாம் சிறுபான்மையாகி விடுவோம்' என்ற பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வெள்ளையர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் இக்கருத்துக்கள் உடனே செயல்வடிவம் பெற்றன. வெள்ளை நிறவெறி அமைப்பான "கூகிளக்ஸ்கிளான்' கருப்பர்களைத் தாக்குவதற்கு முன்பு செய்யும் சிலுவை எரிப்புச் சடங்கை நடத்தியது. கொடியங்குளத்தில் நடந்தது போலவே கருப்பின மக்களின் இல்லங்கள் சூறையாடப்பட்டன.
"கழிப்பறை கழுவுவதற்கும், விவசாய வேலைகளுக்கும் கருப்பர்கள் இல்லாமல் முடியுமா' என்று இந்நகரின் வெள்ளையர்களுக்குப் "புரிய வைத்து', அவர்களைச் சமாதானப்படுத்தி கருப்பர்களைக் குடியமர்த்துவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தேவைப்பட்டது. அமெரிக்காவின் எல்லாச் சிறுநகரங்களும் இப்படி இரத்தக் கறையோடுதான் உருவாகின்றன. இப்போதும் இரண்டாகத்தான் பிரிந்து கிடக்கின்றன நகரங்கள்.
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலம், தொழிற்சாலைகள் நிறைந்த நவீனமான மாநிலம். அங்கே ஒரு பிரபலமான நகரம் ஆலிவட். 1992ஆம் ஆண்டு கணக்கின்படி 1600 வெள்ளையர்களும், ஒரு சில கருப்பின மக்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கிருக்கும் ஆலிவட் கல்லூரியில் பிடிக்கும் மொத்தமுள்ள 700 மாணவர்களில் 55 பேர் மட்டுமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்களில் எவரும் கருப்பரில்லை என்பதோடு 130 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே கருப்பர்.
அந்த ஆண்டு மாணவர்களிடம் மோதல் வெடிக்கிறது. கருப்பின மாணவன் ஒரு வெள்ளை மாணவியிடம் நெருங்கிப் பேசினான் என்று வெள்ளையின மாணவர்கள் சண்டை போடுகிறார்கள். அவர்களுக்காக "கிளான்' நிறவெறி அமைப்பு பிரச்சாரம் செய்கின்றது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் முற்றிலும் வெள்ளையினப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அதாவது "இயல்பாகவே' நிறவெறியர்கள். இவர்களுக்கு கருப்பின மாணவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டுமென்றோ, கருப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்டங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது.
கலவரத்தின் முடிவில் 55 கருப்பின மாணவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேசிய அளவில் இது பிரச்சினையான பிறகு, கருப்பின மக்களும் நாடு முழுவதும் போராடிய பிறகு, கல்லூரி நிர்வாகம் தனது மரியாதையைத் திரும்பப் பெறுவதற்கு மெல்ல மெல்ல முயன்றது. அதன் பின்னர்தான் கணிசமான அளவிற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் கருப்பின மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இது நடந்தேறுவதற்கும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.
அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் சூழ்நிலை பொதுவில் இப்படித்தான் இருக்கிறது. கருப்பின மக்களின் மீதான வெறுப்பை வெள்ளையின மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடமிருந்தும், சமூகச் சூழ்நிலைகளிலிருந்தும் இயல்பாகக் கற்றுக் கொள்கிறார்கள். வெள்ளை நிறவெறி இயக்கங்களுக்கான ஆளெடுப்பு பெரும்பாலும் மாணவர்களிடமிருந்துதான் துவங்குகிறது. அமெரிக்கப் பள்ளி மாணவர் வன்முறையிலும், சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதிலும் வெள்ளையின மாணவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். இத்தகைய கொலைகார மாணவர்களில் பலர் வெள்ளை நிறவெறி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் பல வழக்குகளிலிருந்து அம்பலமாகி இருக்கிறது.
ஏழ்மையினாலும், இந்த நிறவெறிக் கொடுமைகளினாலும் கருப்பின மாணவர்கள் பலர் தமது படிப்பை முடிக்காமலேயே வெளியேறுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்த விலகல் போக்கு வெள்ளையினத்தில் இல்லை என்பதோடு, நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் உயர்கல்வியை முடித்தவர்கள் என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
உணவகங்கள், விடுதிகளில் கடைபிடிக்கப்படும் நிறவெறித் தீண்டாமையை எதிர்த்து 1950களிலேயே கருப்பின மக்கள் போராடினார்கள். அதன்படி இந்தத் தீண்டாமையைத் தடைசெய்து 1964ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இன்றும் அமெரிக்க உணவகங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறவெறி இருக்கின்றது. பதிவு செய்யப்படும் பல்லாயிரம் புகார்கள் இதனை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
நமது கிராமங்களில் இரட்டைக் குவளை இருக்கிறது. ஆனால் இந்த வடிவத்திலான பச்சையான தீண்டாமை நகரங்களில் இல்லை என்று பொதுவில் கூறலாம். ஆனால் அமெரிக்காவிலோ எல்லா நகரங்களின் உணவகங்களிலும் நிறவெறித் தீண்டாமை பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்படுகிறது.
பல்வேறு புள்ளி விவரங்களின்படி, உணவகங்களின் சமையல் மற்றும் கோப்பை கழுவும் வேலைகளில் மட்டுமே கருப்பினத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். உணவு, மது விநியோகிக்கும் வேலைகளில் கருப்பர்கள் மிகக்குறைவு. கருப்பர்கள் நேரடியாக விநியோகித்தால் வெள்ளையின வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதுதான் காரணம்.
சாப்பிட வருபவர்களில் கருப்பின வாடிக்கையாளர்கள் இருந்தால் என்ன செய்வார்கள்? அதைத் தவிர்ப்பதற்காகவே கருப்பினத்தவர்களுக்கு மட்டும் "மேசைக் கட்டணம், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம்' என்று தீட்டி விடுகிறார்கள். கருப்பின மக்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுவகைகளை விற்க மாட்டார்கள். அல்லது விலையை அதிகம் வைத்து விற்பார்கள்.
வீட்டிலிருந்தபடியே உணவை ஆர்டர் செய்வது அங்கே சகஜம். ஆனால் கருப்பினக் குடியிருப்புகளுக்கு மாத்திரம் இந்தச் சேவை கிடையாது. "பூவுலகின் சொர்க்கமான அமெரிக்காவிலா இப்படி' என்று நீங்கள் வியப்படைந்தாலும் அங்கே இவையெல்லாம் இயல்பான விசயங்களாகவே இருந்து வருகின்றன.
அமெரிக்காவெங்கும் 1800 கிளைகளைக் கொண்டிருக்கும் ஷோனி என்ற பிரபலமான உணவக நிறுவனத்துக்கு எதிராக, 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை கறுப்பின மக்கள் தொடுத்த வழக்குகளில், அதன் நிறவெறிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நட்டஈடாக மாத்திரமே 105 மில்லியன் டாலரைச் செலுத்தியிருக்கிறது அந்த நிறுவனம். அதேபோல 1500 கிளைகளைக் கொண்டிருக்கும் டென்னி என்ற நிறுவனம் இதேகாலத்தில் 55 மில்லியன் டாலரை நட்டஈடாகச் செலுத்தியிருக்கிறது.
இன்றைக்கு இந்த நிறுவனங்கள் தமது பிராண்ட் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்றே அடக்கி வாசிக்கின்றன. என்றாலும் நிறவெறியோ புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. இப்போது கருப்பர்களுக்கென்றே தனிக் கிளைகள் நடத்தப்படுகின்றன. மேலும் கருப்பின மக்கள் நெருங்கமுடியாத உயர்கட்டணங்களைக் கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள் வர்க்கரீதியாக வெள்ளை நிறவெறியை நிலைநாட்டுகின்றன. இது பிரபலமான உணவகங்களின் கதை.
உள்ளூர் அளவில் செயல்படும் உணவகங்களிலோ இன்றும் நிறவெறி கேட்பாரின்றிக் கோலோச்சுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தேசிய ஊடகங்கள் செய்தியாகக் கருதி வெளியிடுவதேயில்லை. கருப்பின ஊழியர்கள் பணியாற்றும் பல கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப் மீதிச்சில்லறை வாங்கும் வெள்ளையர்கள் கருப்புக் கைகளைத் தொடுவதில்லை என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வெள்ளைத் திமிரின் வீரியம் பார்ப்பனத் திமிருக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதைத்தான் இச்செய்திகள் காட்டுகின்றன.
"தாங்கள் நிறவெறியர்கள் அல்ல' என்று கூறிக்கொள்ளும் வெள்ளையர்கள் கூட கருப்பின மக்களுக்கு எதிரான “வெள்ளைக் கருத்தை' மனதில் தாங்கியபடிதான் வாழ்கின்றனர். ""கருப்பர்களில்தான் கிரிமினல்கள் அதிகம், கருப்பினக் குடியிருப்புகளில் நடந்து சென்றால் வழிப்பறி செய்வார்கள், வெள்ளையினப் பெண் ஒரு கருப்பனிடம் மாட்டிக் கொண்டால் நிச்சயமாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவாள்'' இவ்வாறெல்லாம் நீள்கிறது அந்தச் சித்திரம்.
ஒரு வகையில் முசுலீம்களைப் பற்றி இந்துக்களிடம் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் சித்திரத்திற்கு ஒப்பானது இது. வெள்ளையின மக்களிடம் மட்டுமல்ல, அவர்கள் கையிலிருக்கும் ஊடகங்கள், அரசியல், போலீசு, நீதித்துறை ஆகிய அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டிலும் இந்தப் பொதுக்கருத்து பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது.
1989ஆம் ஆண்டு அமெரிக்காவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு கிரிமினல் குற்றம் குறித்த கதையே இதற்குச் சான்று.
""நானும் ஏழு மாத கர்ப்பிணியான என் மனைவி கரோலும் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கருப்பின இளைஞன் எங்களை வழிமறித்து, என் மனைவியைக் கொன்றுவிட்டு, என்னையும் சுட்டுக் காயப்படுத்தி, வழிப்பறி செய்து விட்டான்'' என்று போலீசில் புகார் கொடுத்தான் சார்லஸ் என்ற வெள்ளை இளைஞன்.
உடனே நாடே குமுறத் தொடங்கியது. எங்கும் எதிலும் கருப்பின மக்களின் மீதான துவேசம் பொங்கி வழிந்தது. போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சார்லஸ் சொன்ன அடையாளங்களுடன் கூடிய கருப்பின இளைஞன் தேடப்பட்டான். பின்னர் பென்னட் என்ற கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவே கண்ணீர் விடும்படி சென்டிமெண்ட் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டன ஊடகங்கள். கருப்பின மக்கள் அனைவருமே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.
இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்தது. சார்லஸின் தம்பி மாத்திவ் உண்மையை ஒப்புக்கொண்டான். மனைவியை சார்லஸே கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவள் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீட்டிலிருந்து பெரும் பணம் கிடைக்கும் என்பதுதான் கொலைக்கான காரணம். "அண்ணனுக்கு துப்பாக்கி வழங்கியது நான்தான்' என்று தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.
1987 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மட்டும் இதுபோன்று 67 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கருப்பின மக்கள் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வெள்ளைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இருந்தும் இன்று வரை அமெரிக்க "மனசாட்சி' ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.
""அமெரிக்காவில் கொலைசெய்யப்படும் வெள்ளையர்களில் 90% பேரைக் கொல்பவர்களும் வெள்ளையர்கள்தான்'' என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை இப்படி அறைந்து கூறினாலும் வெள்ளையன் ஒருவன் கொல்லப்பட்டவுடனே, ஒரு சராசரி வெள்ளையனின் சந்தேகப் பார்வை முதலில் கருப்பின மக்களை நோக்கியே திரும்புகிறது.
இந்த வெள்ளையினக் கருத்தின் பலத்தில்தான் அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூத்தது கூகிளாக்ஸ்கிளான். 1920 ஆம் ஆண்டு மட்டும் இவ்வமைப்பில் 50 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.
வெள்ளை அங்கிகளைப் அணிந்து கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் சிலுவையை எரித்து சடங்கு நடத்தி "வெள்ளை அதிகாரம்' என்று கூக்குரலிட்டுக் கொண்டே கருப்பர்களைத் தாக்கிக் கொலை செய்வார்கள். இவர்கள் கொலை செய்யும் முறைகளோ வலிமையான மனதைக் கொண்டவர்களையே பதைபதைக்கச் செய்யும். இன்றைக்கு கிளான் வலுவிழந்து பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வந்தாலும் தனது வேரை மாத்திரம் விட்டுவிடவில்லை.
இது போக ஒயிட் ஆரியன் ரெசிஸ்டன்ஸ், வோர்ல்டு சர்ச் ஆஃப் தி கிரியேட்டர், யூத் ஆஃப் ஹிட்லர், பிலிட்ஸ்கிரிக், கிரேசி ஃபிக்கிங் ஸ்கின்ஸ், ரோமான்டிக் வயலன்ஸ், தி ஆர்டர் என்று பல்வேறு பெயர்களில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் செயல்படுகின்றன.
தற்போது அமெரிக்காவில் இதுபோல 300 குழுக்களும், இவற்றில் 50,000 உறுப்பினர்களும், 1,80,000 ஆதரவாளர்களும் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இவற்றின் இணையத் தளங்களைப் பல இலட்சம்பேர் பார்ப்பதாகவும் தெரிகிறது. இந்த வெள்ளை நிறவெறிக் குழுக்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருக்கும் புதிய நாஜி இயக்கங்களோடும் தொடர்புண்டு. இவர்களுக்கு உள்ளூர் அளவில் அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.
இவர்களுக்கென்றே பத்திரிக்கைகளும், இணையத் தளங்களும், கேபிள் டி.வி.க்களும் உண்டு. இவர்கள் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள கார்ட்டூனில் எரிந்து கொண்டிருக்கும் கருப்பின இளைஞனின் படத்தைப் போட்டு "இக்காட்சி பேஸ்பால் விளையாட்டை விட இனிமையானது' என்று எழுதியுள்ளனர். இவர்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அதில் கருப்பின மக்களைத் தாக்குவது, கொடூரமாகக் கொலை செய்வது, கருப்பினத் தேவாலயங்களைக் குண்டு வீசித் தாக்குவது, மற்றும் பல்வேறு வேற்றினத்தவரைத் தாக்குவதையும் தொடர்ந்து செய்கின்றனர்.
இவற்றில் பல தாக்குதல்கள் புகார்களாகவே பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்டதிலும் பெரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 1850க்குப் பிறகு கருப்பரைக் கொன்ற குற்றத்திற்காக இதுவரை ஒரு வெள்ளை நிறவெறியனுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.
இத்தகையதொரு அங்கீகாரம் நிறவெறிக்கு இருப்பதனால்தான் வெள்ளை நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் பலர் அங்கே தேர்தல்களிலும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலிலும் யாரை ஆதரிக்க வேண்டுமென பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்கின்றனர். சென்ற தேர்தலில் புஷ்ஷை ஆதரிக்குமாறு
கூகிளாக்ஸ்கிளான் தனியாக ஒரு வீடியோவையே வெளியிட்டது. அதற்கு முந்தைய தேர்தலில் அல்கோரைத் தோற்கடிப்பதற்கு புஷ் புளோரிடா மாநிலத்தில் கருப்பின மக்களை வாக்களிக்க முடியாமல் செய்ததை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.
ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் நியமிக்கப்பட்ட பல வெள்ளையின நீதிபதிகள் நிறவெறிக்கு ஆதரவாகவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். எனவே வெள்ளை நிறவெறி அமைப்புகள் தீவிர மனநோய் முற்றிய ஒரு சிறு கூட்டமல்ல. அமெரிக்கச் சமூகத்தின் உருத்திரட்டப்பட்ட வெளிப்பாடுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் நிறவெறிக் கொடுமைகளில் போலீசின் அட்டூழியங்கள் முக்கியமானவை. 82 முதல் 92 வரை போலீசை எதிர்த்து கருப்பின மக்கள் தொடுத்த 3000 வழக்குகளை எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரித்திருக்கிறதெனில் பதிவு செய்யப்படாத புகார்களை ஊகித்துக் கொள்ளலாம். போலீசை எதிர்த்து யாரும் எளிதில் புகார் தெரிவிக்க முடியாது என்ற நிலை நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிற்கும் பொருந்தும்.
போலீசின் நிறவெறிக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பிரபலமானது. இங்கு வசிக்கும் 35 இலட்சம் மக்களில் 2,80,000 பேர் மட்டுமே கருப்பினத்தவர். ஆனால் போலீசை எதிர்த்த புகார்களில் 50% கருப்பின மக்களுடையது. இங்கிருக்கும் 8,300 போலீசுக்காரர்களில் வெறும் ஏழு பேர்தான் கருப்பினத்தவர். ஏழு பேர் லத்தீன் அமெரிக்கர்கள். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். 1992ஆம் ஆண்டு நடந்த ரோட்னி கிங் வழக்கு தொடர்பான கலவரத்தை இந்தப் பின்னணியில் பார்த்தால் போலீசின் நிறவெறியைப் புரிந்து கொள்ள முடியும்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 30.4.92 அன்று ரோட்னி கிங் எனும் கருப்பின இளைஞர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தை ஒரு போலீஸ் வாகனம் பின்தொடர்ந்து சென்று மறித்து நிறுத்தியது. உடனே மேலும் சில போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டன. “காரை ஏன் உடனே நிறுத்தவில்லை' என்று சீறிய இரு போலீசு அதிகாரிகள் ரோட்னி கிங்கைக் கொடூரமாகத் தாக்கினர். எந்தத் தவறும் செய்யாத ரோட்னி கிங்கை மற்ற போலீசாரும் சேர்ந்து தாக்கத் தொடங்குகின்றனர்.
அருகில் இருக்கும் கடை ஒன்றின் மேலாளரான ஜார்ஜ் ஹாலிடே என்ற வெள்ளையர் இக்காட்சியினைத் தனது வீடியோவில் பதிவு செய்கிறார். 81 விநாடிகள் ஓடுகிறது அந்த வீடியோபதிவு. அதற்குள் ரோட்னி கிங் மீது விழுந்த அடிகள் 56. பல இடங்களில் எலும்பு முறிந்த நிலையில் ரோட்னி கிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஊடகங்களில் வெளியான இந்த வீடியோக்காட்சி உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஆனால் வெள்ளை அதிகாரவர்க்கம் இதனைப் பத்தோடு பதினொன்றாகக் கருதியது. சிமி வேலியில் நடந்த இவ்வழக்கிற்கான ஜூரிகளில் ஒருவர் கூட கருப்பர் இல்லை. வீடியோ ஆதாரம் இருந்தபோதும் "குற்றவாளிகளில்லை' என்று கூறி போலீசு அதிகாரிகளை விடுவித்தது அந்நீதிமன்றம்.
தீர்ப்பைக் கண்ட கருப்பின மக்கள் குமுறி வெடித்தனர். வெள்ளை நிறிவெறிக்கு எதிராக நவீன அமெரிக்கா அத்தகைய ஒரு கலவரத்தை ஒருபோதும் கண்டதில்லை. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பற்றி எரிந்தது. ஏனைய நகரங்களிலும் வன்முறை வெடித்தது. கருப்பின மக்களுடன் லத்தீனியர்களும் சேர்ந்து கொண்டனர். கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர், 2400 பேர் காயமடைந்தனர்.
கருப்பின மக்களின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சிய அரசு. இரண்டாவது விசாரணைக்கு உத்தரவிட்டது. இம்முறை நடுவர்களில் இரண்டு கருப்பர்களும் ஒரு லத்தீனியரும் இடம் பெற்றனர். இறுதித் தீர்ப்பில் வீடியோ காட்சியில் அடிக்கும் இரண்டு போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. வீடியோ பதிவில் சிக்கிக் கொள்ளாமல் அடித்த போலீசு அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தத் தண்டனை ஒரு கண்துடைப்பு என கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் வெள்ளை நிறவெறியினால் கட்டமைக்கப்பட்ட போலீசு எந்திரத்தை அதற்கு மேல் தண்டிப்பதை அங்கே எண்ணிப்பார்க்கவே முடியாது.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் போலீசு தலைமையகத்தில் இருக்கும் கணினித் திரைகளில் “ஒரு நீக்ரோவை எதிர்கொண்டால் முதலில் சுடு! பின்பு கேள்வி கேள்!' என்ற முத்திரை வாக்கியமே ஒளிர்ந்து கொண்டிருக்குமாம். இப்படிப் போலீசுத்துறை முழுவதும் புரையோடியிருக்கும் நிறவெறியைச் சகிக்க முடியாமல், அமெரிக்காவின் போலீசுத் துறைகளில் மிக அரிதாகவே இருக்கும் கருப்பின அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
1999ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நின்று கொண்டிருந்த அப்பாவிக் கருப்பின இளைஞர் அமடோ தியாலோ, போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தது தூரத்திலிருந்த போலீசுக்கு துப்பாக்கி போல தெரிந்ததாம்! இதை எதிர்த்தும் கருப்பின மக்கள் போராடினர். ஆனால் நீதி கிடைக்கவில்லை.
கருத்துக் கணிப்பு ஓன்றின்படி, போலீசுக்கு அஞ்சி தெருவில் தனியாக நடமாடவே பயப்படுவதாகப் பெரும்பான்மையான கருப்பின மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி பயப்படுவதாக வெள்ளையின மக்கள் யாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசின் நிறவெறி மட்டுமல்ல, அது தோற்றுவிக்கும் அலட்சியம் கூட பல கருப்பின மக்களைக் காவு வாங்குகிறது.
டெக்சாகோ, அமெரிக்காவிலிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இதன் வெள்ளையின மேலதிகாரிகள் கருப்பினப் பணியாளர்களைக் கேவலமாகப் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இதனைக் கண்டித்து 1348 கருப்பினத் தொழிலாளிகள் வழக்கு தொடுத்து, 176 மில்லியன் டாலரை நட்டஈடாகப் பெற்றனர். இதன் சேர்மன் வேறு வழியின்றி தொழிலாளிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க மக்கள் தொகையில் கருப்பின மக்கள் 12 சதவீதம் இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களில் அவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளனர். முக்கியமாக மேலாண்மை நிர்வாகிகளில் கறுப்பினத்தவர் அறவே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெள்ளையருக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்குமெனில், அதே உயர்வுக்காக ஒரு கருப்பினத்தவர் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ஷெல் ஆயில், கொக்கோ கோலா போன்ற நிறுவனங்களின் நிறவெறிப் பாகுபாட்டை எதிர்த்தும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தியாவில் கால் பதித்திருக்கும் இவ்விரண்டு நிறுவனங்களும் பார்ப்பனியத்தின் இயல்பான கூட்டாளிகள் என்பதை அவர்களது அமெரிக்க வரலாறே எடுத்துக் காட்டுகிறது.
அமெரிக்க அரசின் உயர்பதவிகளில் இருக்கும் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறவெறியைக் கக்கியிருக்கிறார்களை. விரிவஞ்சி அவற்றை இங்கே எடுத்துரைக்க முடியவில்லை. அரசு செயல்படுத்தும் பல நடவடிக்கைகளிலும் நிறவெறி அன்றாட விசயமாகத்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் என்று அறிவித்தால், அதனைக் கருப்பின விவசாயிகள் பெற முடியாது. நிறவெறியின் காரணமாகவே பல கருப்பின விவசாயிகள் திவலாகியிருக்கிறார்கள்.
குடியரசுக் கட்சியின் அதிபர்களாக இருந்த ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் வெள்ளை மாளிகையை அப்பட்டமான நிறவெறி ஆட்டிப் படைத்தது. 1988 தேர்தலில் தந்தை புஷ் தனது பிரச்சாரத்தில் வெளிப்படையான நிறவெறி துவேசத்தைக் கக்கினார்.
நேரடி சாட்சியங்கள் இல்லாத ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்ட வில்லியம் ஹார்ட்டன் எனும் கருப்பின இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி அத்தேர்தலில் நிறவெறியைப் பல்வேறு வகைகளில் தூண்டிவிட்டது குடியரசுக் கட்சி. “இத்தகைய கிரிமினல்களின் கையில் நாடு போகவேண்டுமா?' என்பதே தேர்தலின் முத்திரை முழக்கமாக இருந்தது. பின்லேடன், சதாம் ஹூசைன் போன்ற வெளிநாட்டு வில்லன்கள் இல்லாத போது கருப்பின மக்கள்தான் அமைதிக்கும் ஒழுங்குக்கும் எதிரான குறியீடாக அமெரிக்காவில் சித்தரிக்கப் படுகின்றனர்.
இப்படி எல்லாத் துறைகளிலும் வேர் கொண்டிருக்கும் நிறவெறிதான் அமெரிக்காவின் இயக்கத்திலேயே கலந்திருக்கிறது. ஒருசில கருப்பினத்தவர் மேல் நிலைக்கு வந்து விடுவதனால் மட்டுமே நிறவெறி எந்த விதத்திலும் அங்கே முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்து வெட்டப்படும்போதுதான், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கருப்பின மக்களின் விடுதலையும் சாத்தியம்.
அதுவரை கன்டலீசா ரைஸ், காலின் பாவெல், பாரக் ஓபாமா, மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான், மாஜிக் ஜான்சன், டைகர் வுட்ஸ், டென்சில் வாஷிங்டன் முதலிய கருப்பின மேன்மக்கள் துரோகிகளாகவோ, ஒத்தூதிகளாகவோ, அல்லது கோமாளிகளாகவோ அமெரிக்க மக்களின் பொழுதைச் சுவாரசியமாக்குவதை மட்டும்தான் செய்யமுடியும்.
· இளநம்பி

10 செப்டம்பர், 2008

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்!


ஜெனீவா: உலகே மிக ஆர்வமாக எதிர்நோக்கியிருக்கும் புரோட்டான் மோதல் சோதனை இன்று தொடங்கியது.27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள டனலில் முதல் புரோட்டான் கதிர்வீச்சு இன்று சோதனைரீதியில் பாய்ச்சப்பட்டது.ஜெனீவாவுக்கு அருகே உள்ள CERN அணு ஆராய்ச்சி மையத்தில் இந்த சோதனை தொடங்கியது.இந்த சோதனையால் உலகமே அழியப் போகிறது என்று கூக்குரல்கள் ஒரு பக்கம் எதிரொலிக்க இந்த முயற்சி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறியுள்ளார்.இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி பிளாக் ஹோல் எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.அதே நேரத்தி்ல் இந்த சோதனை மூலம் 'Higgs Boson' என்ற சப்-அடாமிக் பார்ட்டிக்கிளை கண்டுபிடித்துவிட முடியும் என CERN விஞ்ஞானிகளின் முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், மானுடத்தின் அடுத்தகட்ட வளர்சி்க்கு இந்த சோதனை மிக மிக அவசியம்.எல்லோரையும் போலவே நானும் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.இன்று இந்த சோதனைகள் தொடங்கினாலும் கூட புரோட்டான்கள் முழு வேகம் பிடித்து ஒன்றோடு ஒன்று மோதிச் சிதற பல மாதங்கள் ஆகும். ஒரு வருடம் கூட ஆகலாம் என்கிறார்கள்.இன்றைய சோதனையில் புரோட்டான் கதிர்வீச்சு கடிகார சுற்றுக்கு எதிர்சுற்றில் பாய்ச்சப்பட்டது. இந்த கதிர்வீச்சு 27 கி.மீ. நீள Large Hadron Collider-ல் சரியாக பயணித்தால், அடுத்ததாக எதிர் திசையில் இருந்து இன்னொரு புரோட்டான் கதிர் பாய்ச்சப்படும்.இன்று நடப்பது வார்ம்-அப் சோதனை தான். முழுமையான சோதனை 6 வாரத்தில் தொடங்கும்.அப்போது எதிரெதிர் திசையில் தலா 2,808 புரோட்டான் கதிர்கள் எதிரெதிரே பாய்ச்சப்படும். அதாவது பல பில்லியன் புரோட்டான்கள் ஒன்றுடன் ஒன்று ஒளியின் வேகத்தில் மோதிச் சிதறும்.அதன் பின்னர் தான் பிளாக் ஹோல் வருகிறதா அல்லது Big Bang தியரிப்படி உலகம் எப்படித் தோன்றியது என்பதற்கான விடையும் கடவுளின் அணுத் துகள்கள் என்று சொல்லப்படும் 'Higgs Boson' தெரிகிறதா என்பதும் தெரியும்.

Higgs Boson'! கடவுளே!


உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. Big bang theory சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டு்ள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்