30 மே, 2009

2009 மத்திய அமைச்சர்கள் பட்டியல்- முழு விவரம்

மத்திய அமைச்சர்கள் பட்டியல்- முழு விவரம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்து 79 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் குறித்த முழு விவரம்:

கேபினட் அமைச்சர்கள்:

1. மன்மோகன் சிங் - பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
2. பிரணாப் முகர்ஜி - நிதி
3. ப.சிதம்பரம் - உள்துறை.
4. எஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவு.
5. மம்தா பானர்ஜி - ரயில்வே
6. ஏ.கே.ஆண்டனி - பாதுகாப்பு.
7. சரத்பவார் - விவசாயம்
8. வீர்பத்ரசிங் - எஃகுத் துறை.
9. விலாஸ்ராவ் தேஷ்முக் -கனரக தொழில் மற்றும் பொதுத்துறை.
10. குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
11. சுஷில் குமார் ஷிண்டே - மின்சாரம்
12. வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதித்துறை.
13. ஃபரூக் அப்துல்லா - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
14. ஜெய்ப்பால் ரெட்டி - நகர்புற வளர்ச்சி
15. கமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
16. வயலார் ரவி - வெளிநாடுவாழ் இந்தியர் நலன்
17. மீரா குமார் - நீர் வள ஆதாரம்
18. தயாநிதிமாறன்- ஜவுளி.
19. ஆ. ராசா - தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்.
20. முரளி தியோரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
21. அம்பிகா சோனி - தகவல் ஒலிபரப்பு.
22. மல்லிகார்ஜூன கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.
23. கபில்சிபல் - மனிதவள மேம்பாடு.
24. பி.கே. ஹண்டிக் - சுரங்கம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு.
25. ஆனந்த் சர்மா - வர்த்தகம், தொழில்துறை.
26. சி.பி. ஜோஷி - கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்.
27. குமாரி செல்ஜா - வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா.
28. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்.
29. எம்.எஸ்.கில்- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு.
30. ஜி.கே.வாசன்- கப்பல் போக்குவரத்து.
31. பவன் கே. பன்சல் - நாடாளுமன்ற விவகாரம்.
32. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அமலாக்கம்.
33. காந்திலால் பூரியா-பழங்குடியினர் நலன்.
34. மு.க. அழகிரி- ரசாயனம், உரம்.

இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு):

1. பிரபுஃல் படேல் - சிவில் விமானப் போக்குவரத்து.
2. பிரிதிவிராஜ் சவுகான் - விஞ்ஞானம், தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், ராணுவ வீரர் நலன், மக்கள் குறை கேட்பு, ஓய்வூதியம், நாடாளுமன்ற விவகாரம்.
3. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல், திட்ட அமலாக்கம்.
4. சல்மான் குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்.
5. தின்ஷா ஜே. படேல் - குறு, சிறு, நடுத்தர தொழில் துறை.
6. கிருஷ்ண தீரத் - மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு.
7. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்.

இணை அமைச்சர்கள்:

1. ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம், உரம்.
2. ஈ. அகமது - ரயில்வே.
3. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் - உள்துறை.
4. வி.நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்.
5. ஜோதிர் ஆதித்ய சிந்தியா - வர்த்தகம், தொழில்துறை.
6. டி. புரந்தேஸ்வரி- மனிதவள மேம்பாடு.
7. கே.எச்.முனியப்பா- ரயில்வே.
8. அஜய் மக்கான்- உள்துறை.
9. பனபகா லட்சுமி- ஜவுளி.
10. நமோ நாராயண் மீனா- நிதித்துறை.
11. எம்.எம்.பல்லம் ராஜூ - பாதுகாப்பு.
12. சவுகதா ராய் - நகர்புற வளர்ச்சி.
13. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்- நிதி.
14. ஜிதின் பிரசாதா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
15. ஏ.சாய் பிரதாப்- எஃகு
16. பிரனீத் கவுர்- வெளியுறவு.
17. குருதாஸ் காமத் - தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்.
18. ஹரீஷ் ராவத் - தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு.
19. கே.வி. தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது வினியோகம்.
20. பரத் சிங் சோலங்கி - எரிசக்தி
21. மகாதேவ் எஸ்.கந்தேலால்- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
22. தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலன்.
23. சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு.
24. சுல்தான் அகமது- சுற்றுலா.
25. முகுல் ராய் - கப்பல் போக்குவரத்து.
26. மோகன் ஜதுவா- தகவல் ஒலிபரப்பு.
27. டி.நெப்போலியன் - சமூகநீதி, அமலாக்கம்.
28. எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல் ஒலிபரப்பு.
29. காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலன்.
30. துஷார் பாய் செளத்ரி - பழங்குடியினர் நலன்.
31. சச்சின் பைலட் - தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்.
32. அருண்யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு.
33. பிரதீக் பிரகாஷ்பாபு பாட்டீல் - கனரக தொழில் துறை, பொதுத்துறை.
34. ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
35. சசிதரூர் - வெளியுறவு.
36. வின்சென்ட் பலா - நீர்வளம்.
37. பிரதீப் ஜெயின் - கிராமப்புற மேம்பாடு.
38. அகதா சங்மா - கிராமப்புற மேம்பாடு.

29 மே, 2009

பள்ளியில் ஆரம்பித்த போராட்டம்...

                                             Stalin

ென்னை: வாரிசாக திணிக்கப்பட்டவர் என்று மு.க.ஸ்டாலின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் அடுக்கினாலும் கூட அவரது வளர்ச்சி, சாதாரண திமுக தொண்டர்களைப் போன்றதுதான்.

அதே நேரத்தில் திமுக தலைவரின் மகன் என்பதால் அவருக்கு சில நேரங்களில் சிறப்பு சலுகைகளும் கிடைத்ததும் உண்மை.

1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின். 2வது மகனுக்கு பட்டுக்கோட்டையாரின் நினைவாக அழகிரி எனப் பெயரிட்ட கருணாநிதி, 3வது மகனுக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார்.

ஒரு முறை, தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டியதில் உள்ள உள்ளார்ந்த காரணத்தை விளக்கிய கருணாநிதி,

மூத்த மகனுக்கு அவருடைய தந்தை முத்துவேலரின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக முத்து என்று பெயரிட்டதாகவும், திராவிட இயக்கத்தின் கொள்கை வீரரான புதுக்கோட்டை அழகிரிசாமியின் நினைவாக இரண்டாவது மகனுக்கு "அழகிரி" எனப் பெயர் வைத்தாகவும், சோவியத் நாட்டின் புகழ்மிக்க தலைவரான ஜோசப் ஸ்டாலின் பெயரால் மூன்றாவது மகனுக்கு ஸ்டாலின் என வைத்ததாகவும், தமிழ் மொழியின்பால் கொண்டுள்ள பற்றின் காரணமாக கடைசி மகனுக்கு தமிழரசு எனப் பெயரிட்டு மகிழ்ந்ததாகவும் கூறினார். 

பள்ளியில் ஆரம்பித்த போராட்டம்...

ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது. சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த நிபந்தனையினைக் கேள்விப்பட்ட கருணாநிதி, பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்ற முடியாது என்று கூறி விட்டார்.

இதையடுத்து ஸ்டாலின் அப்பள்ளியில் சேர முடியவில்லை. சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார்.

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார். கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள்.

மதுரையில் தொடங்கிய இளைஞரணி வாழ்க்கை...

இப்படிப் படிப்படியாக இளைஞரணி அமைப்பை வளர்த்து அதை அமைப்புரீதியாக 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 

தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

மிசாவில் அடிபட்ட ஸ்டாலின்...

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர அடி உதை விழுந்தது.

சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார்.

தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது.

அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது. இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது.

அன்பழகன் வைத்த போட்டி...

புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.


இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார். 

02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடைபோட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கருணாநிதி பதிலளித்தார்.

மேயரானார்...

அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை. 

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு 'ஆசிட் டெஸ்ட்' வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் கருணாநிதி.

ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர். 

ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைத்தது. துப்புரவுப் பணிக்கு முன்னுரிமை அளித்தார். 

சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஓனிக்ஸ் நவீன முறைகளைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வந்தது. சென்னையில் மூன்று மண்டலங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக பகிரங்க ஒப்பந்த புள்ளி மூலம் இந்நிறுவனம் தெரிந்தெடுக்கப்பட்டது. இவ்வாறு சென்னை மாநகராட்சியே குப்பைகளை அகற்றுவதில் நவீன 
முறைகளைப் பயன்படுத்திய முதல் மாநகராட்சியாகும். 

மேம்பாலங்கள்...

மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. 

இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது.

இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெ பறித்த பதவி...

இருப்பினும் 2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது.

இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

முதல் முறையாக அமைச்சர்...

கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின்.

இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி.

ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் ஸ்டாலின். இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

நாடகத்தில் ஆர்வம்...

தந்தையைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகமாகும். இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது. 

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின்.

அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும்.

இந்த அனுபவமே பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது ஸ்டாலினை.

1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன. 1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது.

தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் 'உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வருகிறார்.

நெல்லையில் இளைஞரணியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம்.

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் என்று உயர்ந்தார் ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார்.

வைகோவின் விஸ்வரூப வளர்ச்சி ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது கருதப்பட்டது. ஆனாலும் காலத்தின் கோலமாய், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஸ்டாலினுக்கான தடைக்கல் முற்றிலும் நீங்கியது. 

வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று கூடக் கூறலாம்.

இருப்பினும் சொந்த சகோதரரான மு.க.அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் குழப்பம். ஆனால் இதையும் கூட கருணாநிதி படுசாதுரியமாக சமாளித்தார்.

இருவருக்கும் இடையில் நிலவிய பூசலை தணித்து, இருவரையும் சேர்ந்து செயல்பட வைத்தார். அவரவர் பணியை அவரே பிரித்துக் கொடுக்க, சகோதரர்கள் இருவரும் இப்போது இரட்டைக் குழல் துப்பாக்கி போல இணைந்து, இயைந்து செயல்பட்டு வருகின்றனர்.

40 வயதுக்கு மேல் மதிக்க முடியாத அளவுக்கு ஒரு டிரிம்மான தோற்றம் ஸ்டாலினுக்கு. பலரையும் வியப்படைய வைக்கும் விஷயம் இது. உடற்பயிற்சியை தினசரி தவறாமல் மேற்கொள்பவர் ஸ்டாலின்.

இதுதவிர கிரிக்கெட், கம்ப்யூட்டர் கேம்ஸ், பேட்மின்டன், செஸ், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர். தந்தையைப் போலவே கிரிக்கெட் மீது தனிப் பாசம் கொண்டவர்.

மு.க.ஸ்டாலினின் இன்றைய வளர்ச்சி துணை முதல்வர் என்ற நிலையில் இருந்தாலும் கூட அவரது அடுத்த விஸ்வரூபம் என்ன என்று சொல்லாமலேயே அனைவருக்கும் தெரியும்.

28 மே, 2009

“இந்தியப் பெருங்கடல் எங்கள் மூதாதையர்களின் கடல்- எங்கள் இனத்தை அழிக்கத் துணைபோகும் எவனும் இந்தக் கடலில் கப்பல் ஓட்டவோ எண்ணெய் குழாய் பதிக்கவோ முடியாது’ என முழங்கும் தலைவன் ஒருவன் இந்நி

உல்லாசமாக இருந்தாரா பிரபாகரன்? – அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

sweetdreamsg“இங்கே எங்கு பார்த்தாலும் பிணக் காடாய் கிடக்கிறது’ வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்று, துரோ கத்தால் சுட்டுக் கொல்லப் படுமுன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் இறுதியாக உலகோடு பேசிய வார்த்தைகள் இவை. ““இங்கே எங்கு பார்த்தாலும் பிணக்காடாய் கிடக்கிறது!”. மரணத்தின் எஜமானர்கள் நம் மக்களை முற்றுகையிட்டார்கள், சந்தையில் மலிந்த பொருள் போல் அள்ளிச் சென்றார்கள். சிங்களம் தின்ற உயிர் எத்தனை என்ற கணக்குக்கூட இல்லை. நாமறிய நவீன மனித வரலாற்றில் இப்படியோர் கொடுமை வேறெந்த இனத்திற்கும் நடந்ததில்லை.

“யுத்தம் முடிந்துவிட்டது, விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது’ என இலங்கை அரசு அறிவித்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றன. எனினும் முல்லைத் தீவுக்குச் சென்று வர ஐ.நா. அமைப்புகளுக்கே அனுமதி இல்லை. முல்லைத் தீவை முற்றுகையிட்டது சுமார் ஒரு லட்சம் சிங்கள ராணுவத்தினர். அவர்கள் கடந்த பத்து நாட்களாய் செய்து வரும் வேலை தமிழர் இன அழித்தல் நடந்ததற் கான அத்தனை தட யங்களையும் அகற்றி விடுவது. இத்தனை ராணுவத்தினர் பத்து நாட்கள் துடைத்தபின்னரும் உலகினை அங்கு அனுமதிக்கும் துணிவு இலங்கை அரசுக்கு வரவில்லையென்றால் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

பஞ்சாப் பற்றியெரிந்து கொண்டிருக் கிறது. சீக்கியர்களை யாரும் அடிக்கவோ, அவமானப்படுத்தவோ இல்லை. ஆஸ்திரியா நாட்டில் ஒரு குருத்வாராவில் சீக்கிய மதத்திற்குள்ளேயே இருபிரிவினருக் கிடையில் சண்டை. அதன் எதிரொலி பஞ்சாபில் கேட்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை விடுகிறார். பிரதமர் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

இதே நாளில் ஜெனீவா நகரில் அனைத்துலக மனித உரிமை அவையின் அவசர சிறப்பமர்வு நடந்தது. முல்லைத்தீவில் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் செய்த மனித உரிமை மீறல்களை, யுத்த விதிமீறல்களை விசாரிக்க அனைத்துலக குழு ஒன்று அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன. இத்தீர்மானத்தை எதிர்த்து இலங்கை அரசு தன்னைத் தானே பாராட்டும் ஒரு தீர்மானத்தையும், உலகிடமிருந்து பெரு நிதி கோரும் தீர்மானத்தையும் முன்வைத்தது. இலங்கையின் தீர்மானம் வெற்றி பெற வேண்டி அவையின் 47 உறுப்பு நாடுகளிடையே ஆதரவு திரட்டிய நாடுகள் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகியவை. “”எத்தனை அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டார்கள் என்ற எண்ணிக்கையை அறியும் அருகதை கூட தமிழர்களுக்கு இல்லை” என்று இலங்கையோடு சேர்ந்து இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகள் கூறியிருக்கின்றன. இங்கே கூப்பிடு தொலைவில் ஏழு கோடித் தமிழர்கள் ஏதேனும் செய்யும் எண்ணமும் திண்ணமும் அற்றவர்களாய் எதுவும் பெரிதாக நடக்காததுபோல் நடக்கிறோம். நாதியற்றுப் போனோமடா தமிழா, நாதியற்றுப் போனோம். இப்படியொரு கீழ்மை வேறெந்த இனத்திற்கும் நேர்ந்திடக்கூடாதென இறையருளை வேண்டுகிறேன்.

தமிழனுக்கெதிராய் உலக அரங்கில் தீர்மானத்தை ஆதரித்துவிட்டு புதுடில்லியில் எவரும் சர்க்கார் நடத்திவிட முடியாதென முழங்கும் தமிழகம் எழுகின்றவரை, “இந்தியப் பெருங்கடல் எங்கள் மூதாதையர்களின் கடல்- எங்கள் இனத்தை அழிக்கத் துணைபோகும் எவனும் இந்தக் கடலில் கப்பல் ஓட்டவோ எண்ணெய் குழாய் பதிக்கவோ முடியாது’ என முழங்கும் தலைவன் ஒருவன் இந்நிலத்தில் எழுகின்றவரை நம் இனத்தின் அவலம் இவ்வாறே தொடரும்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறிழைத்துவிட்டார். சிங்களவருக்கு இந்தியாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் பெருந்துணையாய் நின்ற நாட்களிலேயே அவர் சீனாவுடன் பேரம் பேசியிருக்க வேண்டும். அல்லது முன்பேயே அமெரிக்காவுடன் வர்த்தகம் பேசி “திரிகோணமலை துறைமுகத்தை’ நீங்கள் விரும்பும் காலம் வரை நீங்கள் விரும்புகிறபடி பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தமிழீழம் எப்போதோ கிடைத்திருக்கும். பட்டுக் கம்பளங்கள் விரிக்கப்பட்டு உலகத் தலைவர்களில் ஒருவராய் அவர் பெருமையுடன் உலா வந்திருப்பார். உண்மையில் இலங் கையின் இறையாண்மைக்காய் வேலுப்பிள்ளை பிரபாகரன் உறுதியாக நின்ற அளவுக்கு அந்நாட்டின் சிங்களத் தலைவர்கள் நிற்கவே இல்லை. எந்த உலக சக்திக்கும் வடகிழக்கு இலங்கையின் நிலப்பரப்பையும் வளங்களையும் தாரைவார்க்க வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்வரவில்லையென்பதுதான் அவர் செய்த பெரும் பிழை.

“இதயத்தில் பரிசுத்தமுடையோர் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளின் அரசை காண்பார்கள்’ என பைபிள் சொல்கிறது. நான் பார்த்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தனது இயக்கத் தலைவர் என்ற வகையில் உறுதியானவ ராகவும், கடுமையானவராகவும் இருந்தாலும் ஒரு மனிதனாக இதயத்தில் பரிசுத்தமுடையவராகவும், நீதிமானாகவும் இருந்தார்.

தனக்கெனவும் தன் குடும்பத் தினருக்கெனவும் அவர் சொத்து எதுவும் சேர்க்கவில்லை. தனக்கென வங்கிக் கணக்கு அவர் வைத்திருக்கவில்லை. அவரது குடும்பம் உல்லாச வாழ்வு வாழ்ந்ததாய் இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் இலங்கை ராணுவம் வெளியிட்ட புகைப்படங்களை காட்டிய போது அந்த மனிதனை இந்த உலகம் யாரென அறியவில்லையே என மனம் வேதனித்தது.

உண்மையில் அவர் வாழ்க்கையை வெறுத்து ஒறுத்த மனிதரல்ல. அறநெறி நிற்க வேண்டுமென்ற உறுதியைப் போலவே எல்லோரும் வாழ்வில் உண்டு, களித்து, கதை பேசி இன்புற்றிருக்க வேண்டுமென விரும்பியவர். 2001-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதுமே அவர் இயக்கத்திற்கு கொடுத்த முதல் அறிவுறுத்தல்களில் ஒன்றாகக் கூறப்படுவது… “”போராளி களுக்கு வாய்க்கு ருசியா, இறைச்சி, கறியெல்லாம் வச்சு தினமும் சமைச்சுப் போடுங்கோ. யுத்த காலத்திலெ வெறும் சோறும் பருப்புக் குழம்பும் சாப்பிட்டு சரியா கஷ்டப்பட்டு போயிட்டினும்”.

ஆனையிறவுக்கான இறுதி தாக்குதலை 1999-ல் அவர்கள் நடத்து முன் ஒரு சிறு கப்பல் முழுக்க மருந்துப் பொருட்களை புலிகளின் அனைத்துலக கொள்வனவுப் பிரிவினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் கொள்வனவு செய்யப்பட்டி ருந்தது. ஆனால் வெளிக் குறிப்பு களின்படி அம்மருந்துகள் காலாவதியாகி -ஆங்கிலத்தில் “ஊஷ்ல்ண்ழ்ஹ் உஹற்ங்’ என்று சொல்கிறோமே, அது -அப்படி காலாவதி யாகி ஒரு மாதம் கடந்திருந்தது. ஐரோப்பிய நாடுகளது இறுக்கமான தர நிலை கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் காலாவதியாகி விட்டாலும்கூட இரு ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியுமாம். விலையும் குறைவாக இருக்குமென்பதால் வாங்கியிருக்கிறார்கள். அறிந்ததுமே அப்படியொரு ஆத்திரம் கொட்டித் தீர்த்திருக்கிறார் பிரபாகரன். கொள்வனவுப் பிரிவு பொறுப்பாளரை தொடர்பு கொண்டு, சீறித் தள்ளினாராம். “”என்ட போராளிகளின்ட உயிர் உங்களுக்கு அவ்வளவு மலிவா போச்சுதா? இந்த மாதிரி விளையாட்டெ இதோட கடைசியா வச்சுக் கொள்ளுங்கோ” வேரித்தாஸ் வானொலி நாட்களில் போராளி நேயர் ஒருவர் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது: “”எங்கள் தலைவன் பொத்திப் பொத்தியும், தாய்க் குருவி போல் கொத்திக் கொத்தியும் திருத்தி வளர்க்கும் இக்கூட்டம் சண்டையில் மட்டும் புலிக்கூட்டம். மற்றபடி நெஞ்சில் நிறைய ஈரம் கொண்ட மனிதக் கூட்டம்!”.

“”நீங்கள் பெரிய சண்டைக்காரர் என்று உலகிற்குத் தெரியும். மற்றபடி உங்களுக்கு மென்மையான ரசனைகள் உண்டா” என்று கேட்டேன். “”ஓம் ஃபாதர்… நாட்டியம் எனக்கு நல்ல விருப்பம். என்ட மகளையும் நாட்டியம் படிக்க உற்சாகப்படுத்தியிருக்கேன்” என்றார்.

“நன்றாகச் சமைப்பீர்களாமே…?” என்றேன். “”சமைப்பேன். இப்போ அதுக்கெல்லாம் நேரம் இல்லதானே? ஒரு காலத்திலே தோழர்களோடு சந்தோஷமா சமையலெல்லாம் செய்திருக்கோம்” என்றார்.

“பாட்டு பாடுவீர்களா?” என்ற போது மட்டும் கொஞ்சம் வெட்கப்பட்டார். “”பாட வராது… பாட்டுக்கள் நல்லா ரசிப்பேன்” என்றார்.

இரண்டாம் முறையாக நான் அவரைச் சந்தித்தபோது யுத்த காலத்தில் சுமார் 15,000 ஏழை -கைவிடப்பட்ட குழந்தைகளை தங்கள் பிள்ளைகளாய் எமது வானொலியூடாக ஏற்ற புலம்பெயர் மக்களுக்கு நன்றி கூறி நானே எழுதி இசையமைத்த “”கண் கண்ட எங்கள் தெய்வங்களே, நீர் வாழும் திசை நோக்கி கரம் கூப்பினோம்” என்ற பாடல் ஒலிநாடாவை அவரிடம் கொடுத்தேன். கேட்டு நெகிழ்ந்த அவர் நானே ஒரு கணம் ஆடிப்போகும் வண்ணம் கேட்டார், “”ஃபாதர்… “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படம் பார்த்தினீங்களா? அடேயப்பா… “கண்ணாமூச்சி ஏனடா’ பாட்டு ஏ.ஆர்.ரஹ்மான் என்ன மாதிரி போட்டிருக்கிறார். சின்ன வயசென்டாலும் சரியான திறமைக்காரன். கேட்டுக் கேட்டு சலிக்கேலெ… அப்படியொரு அழகான பாட்டு… ஏ..ஆர்.ரஹ்மான் நிச்சயம் உலக அளவிலெ பெரிய இசையமைப்பாளரா வருவார்” என்றார்.

சோழ மன்னர்களுக்குப் பின் தமிழரின் வீரத்தை உலகிற்குச் சொன்ன வேலுப்பிள்ளை பிரபாகரன், “கண்ணாமூச்சி ஏனடா’ பாடலை வியந்து ரசிக்கிற குழந்தையாகவும் இருந்ததென்பது பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய செய்தியாக எனக்குப்பட்டது. எனவேதான் எழுதத் தலைப்பட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் பெருமை பெற்ற செய்தியை போர்க்களத்தில் நின்று கேட்டு நிச்சயம் அவர் மகிழ்ந்திருப்பார்.

1995 முதல் ஈழத்தமிழ் மக்களை மையமாகக் கொண்டு எமது வானொலி நிகழ்ச்சிகள் இருந்தபோதும் செய்திகள் சேகரிப்பிற்குக் கூட விடுதலைப்புலிகள் இயக்கத் தோடு நேரடி தொடர்புகள் எதுவும் நாங்கள் மேற்கொண்டதில்லை. மாதம் ஒன்றுக்கு தமிழ் ஈழப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக் கணக்கான கடிதங்கள் எமக்கு வரும். அந்தக் கடிதங்கள் சுமந்து வந்த உண்மையை உலகோடு நாங்கள் பகிர்ந்தோம். அக்கடிதங்களூடே உலகத் தமிழ் மக்களின் உணர்வு களைக் கட்டினோம். சிலுவைகளும் வியாகுலங் களுமேயான மக்களது வாழ்வுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி நம்பிக்கை தந்தோம். அவ்வாறு செய்வதை பெரிய பணியாகவொன்றும் நினைத்துக் கொண்டு செய்யவில்லை. ஒரு தமிழனாக சக தமிழனின் அவ லத்தில் உணர்வளவில் பங்கேற்ற செயலாக மட்டுமே நான் கருதினேன்.

நான் பிறந்தது ஜனவரி மாதத்தில். 1998-ம் ஆண்டு எனக்குத் தெரியாமலேயே என் சக ஒலிபரப்பாளர்கள் வானொலியில் எனது பிறந்தநாளை அறிவித்திருக்கிறார்கள். இந்த விபரம் எனக்குத் தெரியாது. நள்ளிரவு 11.50-க்கு ஒரு தொலைபேசி அழைப்பு. “”வணக்கம் ஃபாதர்… நான் தமிழ்ச்செல்வன் கதைக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்கட தலைவர் பேசுவார்” என்றார். எனக்கு கை, கால் உதறியது. இனம் புரியா உணர்வொன்று தலைக்கேறி கிர்றென்றது.

“”பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஃபாதர். எங்கட போராட்ட வரலாற்றிலெ உங்களுக்கும் ஒரு இட முண்டு. யாழ்ப்பாணத்தை விட்டு 1995-லெ நாங்க வெளிக்கிட்டப்போ எங்கட சனம் மட்டுமல்ல போராளிகளும் இந்த போராட்டத்தில் நம்பிக்கை இழந்திருந்தாங்கள். அப்ப மக்களின்டெயும் போராளிகளின்டெயும் நம்பிக்கையை தூக்கி நிறுத்தினது உங்கட குரல்தான். அதுக்கு நாங்க மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறம். தொடர்ந்தும் எங்கட மக்களுக்காக கதையுங்க” என்றார். அப்போது எனக்கு வயது 32. படுக்கையினின்று எழுந்து அலுவலகம் ஓடினேன். பழைய என் நிகழ்ச்சிக் குறிப்புகளைத் தேடினேன். அப்படி என்னதான் செய்துவிட்டோம். ஒரு இனம் தேசியத்தலைவன் என்று கொண்டாடும் மனிதன் நம்மை வாழ்த்துவதற்கு என்ற கேள்வி, அலையாய் மனதில். அப்படியொன்றும் நான் செய்திருக்கவில்லை, நம்பிக்கை வார்த்தைகளைத் தவிர. தகர்ந்து போய் நிற்கும் அம்மக்களுக்கு இன்று நாம் தரக்கூடியதும் நம்பிக்கை.

(நினைவுகள் சுழலும்)

http://www.nerudal.com/

""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

      

        றப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது. 

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.
nakkheeran

20 மே, 2009

தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்



PDFPrintE-mail

1988/89 இல் இறந்த தலைவர் 90 இறுதி வரை இறந்தவராக இருந்தபடியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.

ஆனால் எமது போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்லவும்.. சிறிலங்கா அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

தலைவர் பற்றிய காணொளிகள்.. சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப வெளியிடப்படுகின்றன. அவருடைய முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்ரி சேர்ஜரிக் முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். 

அதுமட்டுமன்றி நேற்று நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்றுதான் மீட்கப்பட்டதாம் என்பதும்.. நாணயக்கார நேற்று நாம் அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்றதும்.. கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிரிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்பதற்கு இது நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

எமக்கு இன்றைய தேவை போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே...! நிச்சயம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.

1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. 
இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டுதான்   செத்தவரோ?

 4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும்  உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா  அடையாள அட்டையை  எடுத்து செல்வார் ????


""நம்பிக்கையின் முரட்டுத் துணிவு''  

ள்ளை மாளிகை புல்வெளியில் நின்று கடந்த புதன்கிழமை மதியம் ஒபாமா பேசினார். ""உணவு- குடிநீர் இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி, சண்டை நிறுத்தம், நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை அவரது உரை வலியுறுத்தியது.

 உண்மையா, இல்லையா என்பது தெரியாது. வாஷிங்டன் தமிழ் நண்பர் ஒருவர் ஒபாமா நிர்வாகத் துடன் தொடர்பில் இருக்கிறவர். அவர் சொல்கிறபடி, உரைக்கு முன் நடந்த ஆலோசனையின்போது ராஜபக்சே நிர்வாகம் மட்டில் கடும் அதிருப்தியும் கோபமும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஒபாமா. ""ராணுவமும் விடுதலைப்புலிகளும் சண்டையிட்டு அழியட்டும், எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆனால் அப்பாவி மக்களை உலக மனிதாபிமான அமைப்புகள் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று சொல்ல ராஜபக்சே யார்? எல்லாவற்றிற்கும் சில எல்லைகள் உண்டு என்பதை அவருக்குச் சொல்லுங்கள்'' என உயர் அதிகாரிகளிடம் வெடித்திருக்கிறார்.

கடந்த மாதம் நான் படித்த புத்தகங்களில் இரண்டு ஒபாமா அவர்கள் எழுதியவை. ""நம்பிக்கையின் முரட்டுத் துணிவு''  மற்றும் ""எனது தந்தையின் காற்தடப் பாதையில்... உலக அளவில் 25 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்து வெற்றிப் பதிவு செய்துவிட்ட புத்தகங்கள். 

"நம்பிக்கையின் முரட்டுத் துணிவு' புத்தகத்தில், தன்னை வழிநடத்தும் ஒழுக்க நெறிகளில் ஒன்றாக ஒபாமா "ஊம்ல்ஹற்ட்ஹ்'-யை பலமுறை குறிப்பிட்டிருந்தார். தமிழில் அதை புரிந்து கொள்ள நமக்கு வள்ளலார் போதும். வாடிய பயிரை கண்டு வாடும் உள்ளம், ஈடின் மானிகளாய், ஏழைகளாய் இருப்போரை கண்டு இரங்கும் உள்ளம், வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்வோரைக் கண்டு பதைக்கும் மனம்... இன்னும் அணுக்கமாக "ஊம்ல்ஹற்ட்ஹ்'-யை கூறுவதானால்... ஒரு அரவாணியை, திருநங்கையை புரிந்துகொள்ள அவர்களது அனுபவத்தை உள்வாங்கி உணர்கிற ஆத்தும மேன்மை எனக்கு வேண்டும், இன்றைய ஈழத்தமிழனை புரிந்துகொள்ள நான் ஈழத்தமிழனாக இருந்து பார்க்க வேண்டும்.

தூக்கியபோது பிள்ளையாகவும், கிடத்திய போது பிணமாகவும் கிடத்திய தந்தையாய், சிங்களம் கொன்ற பிள்ளையை மடியிலும் கைப்பிள்ளையை மார்பிலுமாய் அணைத்து துடிக்கிற தாயாய், இயற்கைத் தேவைகளுக்குக்கூட வெளியே வரமுடியாமல் பதுங்கு குழிக்குள் உயிர் பதைத்துக் கிடக்கும் குடும்பமாய், ஒரு குவளை தவிட்டுக் கஞ்சிக்காய் ஒரு மணிநேரம் வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதியாய், அனுராதபுரத்தில் வன்புணர்வு முடிந்தும் வக்கிரம் தீராத சிங்கள ராணுவத்தினரால் மார்பு அறுக்கப்படும் தமிழச்சியாய், ராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தில் நோயுற்றவர்களுக்காய் உயிரோடு உடல் பிளக்கப்பட்டு சிறுநீரகம், ஈரல், கண்கள் அகற்றப்படும் இளைஞனாய் -சுருங்கக் கூறின் ஈழத்தமிழனாய் இருந்து பாருங்கள் உணர்வில்.

கடந்த வியாழன் பெங்களூரு விலிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு. அழைத்தவரது பெயர் அமிதாப். இளைஞர். முதலில் என்னோடு பேசியதோ அவரது அம்மா கிருஷ்ணவேணி. அய்யங்கார் குடும்பம். நக்கீரன் வாசகர்களாம். 1991 டிசம்பரில் காவிரி நீர் தமிழகத்திற்குத் தரக்கூடாதென கன்னடர்கள் நடத்திய கலவரத் தில் ஒரே ஒரு நாள் அகதிகளான அனுபவம் கிடைக்கப்பெற்றவர்கள். கிருஷ்ணவேணி அம்மா என்னிடம் கூறினார்: ""ஒரே ஒருநாள் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு அகதியான அனுபவத்தின் வலியை 18 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் என்னால் மறக்க முடியவில்லை...'' என்றார். தனது மகன் அமிதாப் ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழித்தலை உலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல தயாராய் இருப்பதாகக் கூறினார். இதற்குப் பெயர்தான் ஒபாமா குறிப்பிடும் "ஊம்ல்ஹற்ட்ஹ்'.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கிறவர்கள் 15,000-லிருந்து 20,000 பேர் வரை என இலங்கை அரசு சொல் கிறது. ஆனால் களத்தில் மக்களிடையே பணி யாற்றிவரும் அருட்திரு. எட்மன்ட் ரெஜினால்ட் நமக்குத் தருகிற தகவலின்படி இன்னும் அங்கு உணவு மருந்து, குடிநீர் இன்றி வாழும் தமிழர்கள் 1,65,000 பேர். இவர்களை குறிவைத்து கடந்த ஞாயிறு இரவு தொடங்கி பத்துமணிநேரம் தொடர் எறிகணை வீச்சு நடத்தியது சிங்கள ராணுவம். பி.பி.சி. தகவல்படி 378 தமிழர் பலி. இவர்களில் நூற்றுக்கும் மேலானோர் குழந்தைகள், 1112 பேர் படுகாயம். ஆனால் உண்மையான எண்ணிக்கை, கொல்லப்பட்டது சுமார் 1700 பேர், படுகாயமுற்றதும் அதே எண்ணிக்கையில். நமது கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இக்கொடுமையை ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, பிரித்தானிய நாடுகள் ""இரத்தக் குளியல்'' எனக் குறிப்பிட்டு கண்டித்தன.

இரத்தக் குளியல் கொடுமைதான் ஒபாமா அவர்களின் கோபத்தை கடுமையாக்கியதாகக் கூறப்படுகிறது. இலங்கை அரசின் அனுமதி இல்லாம லேயே உயிர்வாடி நிற்கும் 1,65,000 மக்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கத் தயாராகும்படி அமெரிக்கா வின் பசிபிக் பெருங்கடல் கப்பற்படை பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கிய தாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்கா களம் இறங்கினால் இன அழித்தல் திட்டத்தை முழுமையாக்க முடியா தென்பதை நன்கே அறிந்த ராஜபக்சே கும்பல் அமெரிக்க கப்பல்கள் புறப்படு முன்னரே இறுதி யுத்தத்தை கடந்த வெள்ளி அதிகாலை தொடங்கினார்கள். ரசாயனத் தாக்குதல் நடத்தி பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்தபின் முன் நகர்ந்திருக்கிறது ராணுவம். எங்கு நோக்கினும் பிணக்குவியல்... தாயின் கரம் பற்றியபடி கருகிக் கிடக்கும் பிஞ்சுகள்... 15 வயதுக்கு கீழான பிள்ளைகள் ஆயிரத்திற்கும் மேல்... என நெஞ்சை உலுக்கும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன. 

களத்தின் உண்மையை எனக்குச் சொல்லி வந்த அருட் தந்தையர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உயிரோடிருக்கிறார்களா, இல்லை ரசாயனக் குண்டுகளில் மூச்சடங்கிப் போனார்களாவென்பது தெரியவில்லை.

களத்தில்தான் நிற்கிறாராம் வேலுப்பிள்ளை பிரபாகரன். தளபதிகள் பலமுறை கெஞ்சி மன்றாடியும் நகர மறுத்து வந்தாராம். தன்னை நம்பி நின்று களமாடும் போராளிகளோடு தானும் போரிட்டு மடிவதென்பதில் உறுதியாக இருந்ததாய் சொல் கிறார்கள். ஆனால் வெள்ளி மதியம் தளபதிகளே இணைந்து முடிவெடுத்து தலைவருக்கு உத்தர விட்டிருக்கிறார்கள். ""விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் நீங்கள் உயிரோடிருப்பது முக்கியம். போர்க்களத்தைவிட்டு உங்களை அப்புறப்படுத்துவது எங்கள் முடிவு. பெரும்பான்மை முடிவை நீங்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும்'' என்றிருக்கிறார்கள். ஒருகணம் அம்முடிவை பிரபாகரன் ஏற்றுக்கொள்ள ஆபத்தானதோர் ஊடறுப்புத் தாக்குதலை மூத்த தளபதி சொர்ணம் தலைமையில் நடத்தி பிரபாகரன் அவர் களை பாதுகாப்பாக முற்றுகையிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது துரதிருஷ்ட வசமாய் தளபதி சொர்ணம் வீரமரணம் தழுவியதாய் சொல்லப்படுகிறது. ""களத்தில் போராளிகளுடன் நான் நிற்கவேண்டுமென்பது இயற்கை         யின் விருப்பம்'' என்றிருக்கிறார் பிரபாகரன்.

தேர்தல் முடிவுகள் வந்து விட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் நாங்கள் நடத்திய ஆய்வின்படி இன்றைய தி.மு.க. கூட்டணி நிச்சயம் 36 தொகுதிகளை வென்றிருக்கவேண்டும். ரூபாய்க்கு கிலோ அரிசி உள்ளிட்ட பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் ஏழை-எளிய மக்களிடையே உறுதியான ஆதரவை உருவாக்கியிருந்தது. காங் கிரஸ் வேட்பாளர்கள் தமிழகத்தில் சந் தித்துள்ள பின்னடைவுக்கும் ஈழத்தமி ழர் பிரச்சனைக்கும் தொடர்பு உண்டு. 

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஏப்ரல் இறுதியில் சேகரித்த தரவு விபரங்களை (உஹற்ஹ). துல்லியமாக ஆய்வு செய்தேன். தி.மு.க. வேட்பாளர்தான் முன்னிலையில் இருந்தார். முன் சொன்னதுபோல நல வாழ்வுத் திட்டங்களுக்காய் மட்டுமே 16 சதம் பேர் வாக்களிப்பதாகக் கூறியிருந்தனர். ஆனால் தி.மு.க. உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் நான்கு சதம்பேர் கட்சி வேட்பாளருக்கு எதிராய் வாக்களிப்ப தாகக் கூறியிருந்தனர். காரணம் ஈழத்தமிழர் பிரச்சனை. ஈழத்தமிழர் பிரச்சனையை கண்டுகொள்ளாமலே கூட தேர்தல்களை தி.மு.க. வென்று விடலாம். ஆனால் மொழி, இன மற்றும் சமூக நீதி உணர்வுகளில் புடமிடப்பட்ட தன் கழகக் கண்மணிகளை, விதை நெல்களை படிப்படியாக இழக்கும். நாட்பட, ஓர் இயக்கமாய் மிகவும் பலவீனப்படும்.

அசாத்திய உழைப்பும், தியாகங் களும், அளப்பரிய பங்களிப்புகளால் வளர்ந்து விரிந்த கலைஞரின் பொது வாழ்வு உச்சம் தொடும் நாட்கள் இவை. "தமிழினத் தலை வர்' என்பதுதான் அவரது தகை மைக்கு உரிய தகுதி. 

தேர்தல் காலத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சியான மாற்றம் செல்வி.ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காய் எழுப்பிய குரல். ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் அவரிடம் கொடுத்த தமிழ் அகதி மக்களின், குறிப்பாக பெண்கள் படும் அவலத்தின் ஒளிப்பதிவினை பார்த்து செல்வி.ஜெயலலிதா கண்கலங்கியதாக அவருக்கு நெருக்கமான வர்கள் கூறியுள்ளார்கள். அவரது குரல் மேலும் கூர்மைபெறுமெனில் தமிழ் மக்களது வரலாற்று நினைவுகளில் நீங்காத இடம் பெறுவார்.

ஈழத்தமிழ் மக்களது முதல் எதிரி ராஜபக்சே கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பேரினவாதம், இரண்டாவது எதிரி அப்பேரினவாதத்திற்கு துணை நிற்கும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை, மூன்றாவது எதிரி இந்தியப்பெருங்கடல் மேலாதிக்கத்தை நோக்கி அரசியல் நடத்தும் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள். நான்காவது எதிரி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கருத்துருவாக்கும் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள். அதற்குப் பின்னர்தான் தமிழகத்தின் அரசியல் வாதிகள்.

ஒருவரையொருவர் விமர்சித்து, வசைபாடி, அன்றாட அறிக்கைப்போர் நடத்தி ஈழத்தமிழ் மக்களின் துயரத்தையும் வலிகளையும் மேலும் ரணப்படுத்தாதீர்கள் என்பதுதான் நமது மன்றாட்டு. தமிழ் தேசியத் தலைவர் ஒருவரைச் சுற்றி இலங்கை ராணுவப் புலனாய்வுத்துறை அவருக்குத் தெரியாமலே ஊடுருவியிருப்பதை நான் அறிவேன்.


ஜெகத் கஸ்பர்         
nakkheeran

19 மே, 2009

நாங்கள் இனி நடைபினமே பதிவு செய்தது: 19 May 2009 7:30 pm

 

உன்னுயிர் போன பின் நாங்கள் வாழ்வது முறையா?? வீராதி வீரா உன்னை பகைவர்களால் கொல்ல முடியாது - காட்டி கொடுக்கும் கருணாக்களால் மட்டுமே கொல்ல முடியும். அண்ணா, நீ வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதை விட, உன்னை இழந்து நடைப்பிணமாய் வாழ்வது வேதனையே. இந்த உருவம் கூட நீயாக இருக்க கூடாது, உன்னை போல் உருவ ஒற்றுமை படைத்த சகோதரன் ஒருவனாக இருக்க வேண்டும். என் தமிழ், என் மக்கள் என்று வாழ்ந்த உன்னை சரியாக புரியாத ஈன தமிழர்களும் இன்று உன் மரணத்தை கண்டு கலங்கி போய் உள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஈழப் போராட்டம்[^] இருந்தது என்றாலும் கூட பிரபாகரன் தலைமையில் நடந்த போராட்டமும், போர்களும்தான் உலக அளவில் ஈழம் குறித்த பார்வையை இலங்கையின் பக்கம் திருப்பின.

தமிழ்ப் புதிய புலிகள் என்ற அமைப்பை பிரபாகரன் தொடங்கியது முதல் இன்று வரை நடந்த ஈழப் போராட்டத்தின் சில முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ...

1972: தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பை தொடங்கினார் பிரபாகரன்.

1976: தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாக உருமாறியது.

1983, 23 ஜூலை: யாழ்ப்பாணத்தில் ராணுவ வாகனங்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர், 13 வீரர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள்[^] மீது இலங்கை ராணுவம் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

1985, 8 ஜூலை: பூடான் தலைநகர் திம்புவில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முதல் முறையாக பேச்சுவார்த்தை நடந்தது.

1987, 29 ஜூலை: ராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1990, 24 மார்ச்: 1200 ராணுவ வீரர்களை இழந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை இந்தியாவுக்குத் திரும்பியது.

1990, ஜூன்: அமைதி ஒப்பந்தத்திலிருந்து விலகிய நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான போலீஸாரை சுட்டுக் கொன்றனர் விடுதலைப் புலிகள்.

1991, 21 மே: இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

1993, 1 மே: கொழும்பில் நடந்த மே தின கூட்டத்தில் அதிபர் பிரேமதாசா மனித வெடிகுண்டுக்குப் பலியானார்.

1995, ஜனவரி: சந்திரிகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டனர்.

1995, ஏப்ரல்: இரு கடற்படைக் கப்பல்களை குண்டு வைத்துத் தகர்த்தனர் விடுதலைப் புலிகள்.

1995, 2 டிசம்பர்: ஈழத் தமிழர்களின் கலாச்சார பெருமை கொண்ட நகரான யாழ்ப்பாணம், இலங்கை ராணுவத்திடம் வீழ்ந்தது.

1996, 31 ஜனவரி: கொழும்பின் மையப் பகுதியில் உள்ள மத்திய வங்கி மீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 1400 பேர் காயமடைந்தனர்.

1996, 24 ஜூலை: கொழும்பின் தெற்கில் உள்ள டெஹிவேலா என்ற இடத்தில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டில் 70 பேர் பலியானார்கள்.

1996, 18 ஜூலை: முல்லைத்தீவில் உள்ள ராணுவ முகாமை விடுதலைப் புலிகள் தாக்கித் தகர்த்ததில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1998, 25 ஜனவரி: கண்டியில் உள்ள புகழ் பெற்ற புத்த கோவிலான தலதா மலிகவா (புத்தரின் பல் இங்கு வைக்கப்பட்டுள்ளது) மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1998, 26 செப்டம்பர்: கிளிநொச்சி ராணுவ முகாம் மீது நடத்திய புலிகள் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1999, டிசம்பர்: விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து அதிபர் சந்திரிகா உயிர் தப்பினார். கண்ணில் கடும் சேதம்.

2000, ஏப்ரல்: யானை இறவை மீட்டனர் புலிகள். இலங்கைப் படைகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

2001, ஜூலை: கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

2002, 22 பிப்ரவரி: நார்வே முயற்சியால் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், பிரபாகரனும் தனித் தனியாக கையெழுத்திட்டனர்.

2002, டிசம்பர்: நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையின்போது அதிகாரப்பகிர்வுக்கு இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஒத்துக் கொண்டனர்.

2003 ஏப்ரல்: ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகியது விடுதலைப் புலிகள் இயக்கம்.

2004, 3 மார்ச்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்குப் பிரிவு தளபதியான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன், புலிகள் இயக்கத்திலிருந்து விலகினார்.

2005, 12 ஆகஸ்ட்: வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொழும்பில் கொல்லப்பட்டார்.

2005, 4 டிசம்பர்: யாழ் வளைகுடாவில், இலங்கைப் படையினருக்கு எதிராக கண்ணிவெடி மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தீவிரப்படுத்தினர்.

2007, மார்ச்: விடுதலைப் புலிகள் தங்களது முதல் விமானத் தாக்குதலை நடத்தி உலகை அதிர வைத்தனர். கட்டுநாயகே விமானதளத்தின் மீது புலிகளின் விமானம் குண்டு வீசித் தாக்கியது.

ஏப்ரல் - 2வது முறையாக விமானத் தாக்குதலை நடத்தினர் புலிகள். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 9 முறை விமானத் தாக்குதல்[^] களை நடத்தியுள்ளனர் புலிகள்.

2007, 15 ஜனவரி: கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான வாகரையை ராணுவம் பிடித்தது.

2007, 11 ஜூலை: கிழக்கில் இருந்த புலிகளின் கடைசி நகரான தொப்பிகலாவை ராணுவம் பிடித்தது. கிழக்கு மாகாணம் முழுவதும் ராணுவம் வசம் வந்தது.

2007, 2 நவம்பர்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2008, 2 ஜனவரி: ஜனவரி 14ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக இலங்கை அரசு அறிவித்தது. அன்று முதல் புலிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியது.

2008, செப்டம்பர்: முல்லைத்தீவு, கிளிநொச்சியில் இருந்து செயல்பட்டு வரும் அனைத்து மனிதாபிமான குழுக்களும், வெளிநாட்டு ஊழியர்களும் வவுனியாவுக்கு செல்லுமாறு அரசு உத்தரவிட்டது.

2009, 2 ஜனவரி: பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது.

2009, 25 ஜனவரி: முல்லைத்தீவு நகரை ராணுவம் கைப்பற்றியது.

2009, 12 பிப்ரவரி: முல்லைத்தீவின் மேற்குப் பகுதியில் 12 கிலோமீட்டர் பகுதியை போரற்ற பகுதியாக இலங்கை அரசு அறிவித்தது.

2009, 20 பிப்ரவரி: கொழும்பில் விமானம் மூலம் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள்.

2008 மார்ச்: வன்னிப் பகுதியை பிடிக்க ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

2009, 14 ஏப்ரல்: பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2009, 20 ஏப்ரல்: 24 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என இலங்கை அரசு விடுதலைப் புலிகளை எச்சரித்தது.

2009, 22 ஏப்ரல்: விடுதலைப் புலிகளின் முன்னாள் மீடியா ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர், மொழிபெயர்ப்பாளர் ஜார்ஜ் ஆகியோர் ராணுவத்திடம் சரணடைந்தனர்.

2009, 26 ஏப்ரல்: போர் நிறுத்தம் செய்வதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.

2009, 27 ஏப்ரல்: தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட கடும் நெருக்கடியைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என இலங்கை அரசு அறிவித்தது.

2009, 16 மே: 3000க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவித்தது.

மே 18, 2009 - விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசி நிலப் பகுதியையும் பிடித்து விட்டதாகவும், அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது இலங்கை அரசு.

மே 19, 2009 - பிரபாகரன் கொல்லப்படவில்லை, அவர் உயிருடன், நலமாக இருப்பதாகவிடுதலைப் புலிகள்[^] இயக்கம் அறிவித்தது.

- நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, பிரபாகரன்[^] மரணம் குறித்து எதையும் தெரிவிக்காமல் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

- ஆனால் ராஜபக்சே பேச்சை முடித்த சில மணி நேரங்களில் பிரபாகரனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்த ராணுவம் அதுதொடர்பான வீடியோ படத்தையும் வெளியிட்டு தமிழ் உலகை அதிர வைத்ததது.

12 மே, 2009

ஆரியம் வேறு, திராவிடம் வேறு! போதித்த உணர்வெல்லாம் படுகுழியில் போயிற்றா?



ெயலலிதா என்னும் பார்ப்பன பாசிப்பேயை எதிர்த்து எழுதியதல்ல!  தந்தை பெரியாரின் தொண்டரென்று பகரும் தோழர்களே, பெரியாரின் பேரனென்று பெருமை பேசும் 'கலை'வாணர்களே! இனவுணர்வு என்று இடி முழக்கம் செய்வோரே, எங்கே போகின்றீர்? யாரைத் தூக்கிச் சுமக்க தாவி நிற்கின்றீர், தடம் மாறித்தவிக்கின்றீர்? தவறுதான், எங்களை தூக்கி சுமக்க, கரையேற்ற வேண்டிய தமிழினத்தலைவர்கள்(?) ரவுடி அரசியலுக்கு பல்லக்கு தூக்கும் பொழுது திக்கற்றவர்களாய், எங்கு போய் அழுவது. ஈழத்தில் எம் சகோதரன் சாகக்கிடக்க, படுத்த இடத்தில் சிதறி வெடிக்க, இங்கு கொள்கையில் வாயளவில் பேசி, எங்கள் வாய்க்கு பூட்டும் போட நினைத்தால் என் செய்வது.

தாயே தயாபரியென்று யாரிடம் மடிப் பிச்சை? அருள் தாராய் தேவியென்று ஆரிடம் பிரார்த்தனை தோத்திரம் செய்கின்றீர் - துந்துபி முழங்குகின்றீர்? ஒருகணம் ஒரே ஒரு கணம் சிந்தித்ததுண்டா? ஆரியப்பேயை கெஞ்சும் நிலைக்கு எம்மை யார் ஆளாக்கியது? இத்தாலி பேயின் காலடியில் எம்மை விழச்சொல்லி ஓட்டுக் கேட்கும் துரோகத்தலைவர்களுக்கு, இந்த கேள்வியை கேட்க என்ன தகுதியிருக்கிறது என்று எங்கள் தெருவில் கோலி விளையாடும் சிறுபிள்ளை கேட்கிறான் பதில் சொல்லுங்கள். இந்திய ஆளும் வர்க்கமே பார்ப்பனிய பனியா கும்பலுடையது, காங்கிரசு மட்டும் என்ன இதில் விதிவிலக்கா? ஜெயலலிதா பாப்பாத்தி, நாம் மறுக்கவில்லை, அதை அந்த பாப்பாத்தியும் மறைத்ததில்லை, சட்டமன்றத்தில் நேரடியாக அறிவித்தார். அப்படியிருக்க இப்பொழுது வீராவேசமாக கேள்வி கேட்கும் தோழர்கள் எம்மை ஜெயலலிதாவிடம் சரணடையச் சொல்லி எம்மை(பெரியாரிய தோழர்களை) மூளைச்சலவை செய்தனரே, சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தனரே! பாப்பத்தி காலில் விழச்சொல்லும் பொழுது இதை சிந்தித்திருந்தால்; இப்பொழுது இவர்கள் சொல்வதை நாமும் சிந்திக்கலாம். பெரியாரியலே தமிழகம் முழுக்க பரவியிருக்க வேண்டிய சூழலில், எம்  தந்தை பெரியாரை மறக்க செய்த,  பெரியாரே யாரென்று தெரியாமல் வளரும் தலைமுறையை உருவாக்கி தந்த திராவிட பேய்களை உரிமையோடு கண்டிக்கக்கூட துப்பில்லாமல், ரவுகளின் கூடாரமாய் யார் ஆக்கியது. யார் குற்றம்? தமிழகத்தின் பிரதிநிதியாய் அழகிரிதான் போக முடியுமென்றால், களத்தில் நின்று சமூகநீதிக்காய் உண்மையாய் உழைக்கும் தொண்டன் அழகிரியின் தகுதிக்கு குறைச்சலா என்ன? சீர்தூக்கிப் பார்த்ததுண்டா? பிரபாகரன் பேரழிவு சக்தியென்று பீரங்கியாய் முழங்கியவர் பெற்றன்னையாய் மாறி விட்டாரா? பேரன்பைத்தான் பொழிந்தாரா? “பிரபாகரன் பேரழிவு சக்தி, அவர் சர்வாதிகாரி” இது இருவேறு தலைவர்களால் சொல்லப்பட்டது என்று நம்ப இயலுமா? நஞ்சுப்பால் சுரக்கும் மார்பானாலும் பசியால் துடிக்கும் குழந்தைக்கு தன்னையறியாமல் மார்பகத்தை முற்றுகையிடும். தமிழினம் அழும் குழந்தையாய் மார்பகத்தை முற்றுகையிட்டிருக்கிறது, பசி போகாதா? என்று. மீண்டும் நஞ்சு சுரந்தால் மார்பறுக்கும் திராணி பெற வேண்டும் என்பதுதான் நம் நிலைப்பாடு. பாப்பாத்தியின் மார்பகத்தை குறைகூறும் தோழர்கள், அன்னை சோனியாவின் மார்பகத்தில் அமிழ்தம் சுரக்கிறது போன்று பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்களே! என்பதுதான் எம் வருத்தம். அப்படியென்றால் அன்பர்களே, பிரபாகரன் எப்படி அண்ணன் ஆவார் உங்களுக்கு? பெரியாரை தந்தை என்ற வாயால் தாயென்று யாரை அடையாளம் காட்டுகின்றீர்? விடுதலைப்புலிகள் இயக்கமா? கூடாது கூடாது. தடை செய்யப்பட்டே ஆக வேண்டும் என்று எக்காளமிட்டவர் யார்? தடை செய்யக் காரணம் நான், நான்தான் ஆம் நானேதானென்று தாண்டிக் குதித்தவர் தாயாகி விட்டாரா தங்களுக்கெல்லாம்? இன எதிரி எப்பொழுது இன்முக அன்னையானார்? பெரியார்தான் எம் இனத்தின் தந்தை இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. செயலலிதா எமக்கு இல்லைதான். அனாதையாகிப்போன தமிழினத்திற்கு அவரின் தமிழீழ கோரிக்கை மற்றும் வாக்குறுதி கொஞ்சம் வியப்பாக அச்சமாக இருந்தாலும், எம் இனத்தின் ஆதரவற்ற நிலை அவரை வரவேற்க செய்திருக்கிறது. ஆசிரியரே இதை வரவேற்றார், ஆனால் கண்டிப்பாக மாறுவார் என்றார். நாங்கள் அவர் மாறினால் தொடர்ந்து போராடும் போர்க்குணம் பெரியாரியல் எங்களுக்கு அளிக்கும் என்ற உறுதியோடு செயல்படுகிறோம் அவ்வளவே. இத்தாலி சோனியாவை நா கூசாமல் அன்னை என அழைக்க அழுத்தம் கொடுப்பவர்களின் வாயை அவர்களின் பற்களே கடித்து இரத்தம் வடிய செய்திருக்க வேண்டும், ஆனால், அது நிகழவில்லை எங்கள் வாயை மட்டும் குறைகூறி தங்கள் கருணாநிதி என்னும் பிழைப்புவாதிக்கான ஆதரவுக்கு ஆதரவு சேர்க்கின்றனர். சந்தர்ப்ப வேடம்கட்டி சாய்த்திடுவார் சவக்குழிக்குள் சாய்ந்திடப் போகின்றீரா? ஆரியத்துக்கு வெற்றியா? அய்யா பிறந்த பிறகும்? இது ஆரியத்திற்கான வெற்றி போல தோன்றலாம், இன உணர்வு ஆரிய திமிரை வாக்குக்காக நிலை இறங்கி கீழே வரச்செய்து மாற்றியிருப்பது இனஎழுச்சி, அதை நாம் எப்படி மறுப்பது? ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடு மாற்றம் ஈழமக்களின் நலனை புறக்கணிப்பவர்களுக்கு சாவு மணி அடிக்க தமிழினம் தயாராகும் முதல் படி. அடுத்தடுத்த படிகளுக்கு, தமிழினம் முன்னேற வேண்டும் நாம் அதற்கு உழைக்க வேண்டும். அய்யகோ வெட்கம், வெட்கம் ஆழ்மனம் துடிக்கிறதே! குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகிறார் ஜெயலலிதா கேளுங்கள் கேளுங்கள் ஜெயராமன், ஜெயமோகன் ஜெயலட்சுமி, ஜெகதீசுவரி தப்பித் தவறித் தமிழுண்டா? பார்ப்பன மொழியைத் தேடித் தேடி கண்டுபிடித்து சூட்டும் மர்மமென்ன - புரியலியா? அருந்தமிழ் காக்கும் அங்கயற்கண்ணி ஆகிவிட்டாரா?


ெயலலிதா தமிழ் மொழி காக்கமாட்டார், சரி இது பாப்பத்தியின் அருகில் நின்றபோது தெரிந்திருக்க வேண்டும்தானே. எந்த அடிப்படையில் முன் நாம் அவரிடம் போய் நின்றோம். அடிமட்ட தோழனின் உணர்வுகளை மதித்து நடத்தியிருக்க வேண்டும், கருஞ்சட்டைப்படை மந்தைக்கூட்டமாக, கருணாநிதிக்கு பின்னால் போகச்சொல்வதில் மட்டும் என்ன பெரியாரியல் உள்ளது? தமிழ் பெயர் கொண்டதால் மட்டும் தமிழனில்லை என்று ஆகிவிடுமா? மலம் கூட தமிழ்ச்சொல்தான் அதை ஏற்க இயலுமா? தமிழன் பாப்பாத்தியிடம் பெயர் வைத்துக் கொள்ளும் நிலைக்கு, பார்ப்பன தலைமைக்கு வழிவிட செய்த பிழைகள் எத்தனை? சிந்தித்து பார்க்க வேண்டும் முன்னோடிகள். “தமிழ், தமிழ்”என்றே தமிழனை சுரண்டும் கூட்டம் நேர்மையாக நடந்திருந்தால், சரியாக ஆட்சி நடத்தியிருந்தால், மக்களிடம் நேர்மையையும், தியாகமும் கற்பிக்க அடிப்படை கல்வியில் மாற்றம் கண்டிருந்தால், சுயமரியாதை தானாக வந்திருக்கும். அடிமைத்தனைத்தையே கல்வியாய் கற்பித்துவிட்டு, சுயமரியாதை கொள், நம் சகோதரனுக்கு கொல் என்றுதான் கேட்கும், வாக்கு பணம் வாங்கி இனமானம் விற்கத்தான் செய்வான். ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று அய்யாவும் அண்ணாவும் போதித்த உணர்வெல்லாம் படுகுழியில் போயிற்றா!  ஆற்றில் குளிக்கப்போய் ஆத்தில் குதித்தீரா? தேளைத் தேனென்று சொல்ல தீர்மானித்தது எப்பொழுது? தேளை தேனென்று சொல்ல தீர்மானித்தது எப்போது? அருமையான கேள்வி தன்னாய்வு செய்து நாம் எப்பொது பெரியாரியல் தொண்டர்களுக்கு  அறிமுகம் செய்தோம் என்று கேட்டால் எளிதாக தெரிந்து விடப்போகிறது. ஈழத்தைப்பற்றி கவலை எப்போது? தேர்தலுக்கு முதல் நாளா? இத்தனை நாள் கவலைப்பட்ட கருணாநிதி மட்டும் என்ன கிழித்து, ஜெயலலிதா எதிரி, கருணாநிதி துரோகி....முத்துக்குமரனை யாரென்று கேட்டார்(ன்) இளங்கோவன் என்ற வெங்காயம், அதே முத்துக்குமரனை யாரென்று சொல்லவில்லை இந்த மு.க....முத்துக்குமரன் அம்பலப்படுத்தியது போதாதென்று நாம் வேறு தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டுமா என்ன?Image தமிழகத்தில் எழுந்த மக்கள் எழுச்சியை அடக்கியது, கருணா-காங்கிரசு கும்பலின் அதிகார வர்க்கம்தானே! மு.க. நடத்திய போராட்டங்கள் மக்கள் எழுச்சியை காயடித்தைதவிர வேறென்ன செய்தது? மிகசமீபத்திய 6 மணிநேர உண்ணாவிரத நாடகம், அப்பப்பா, தமிழனை இவ்வளவு கேனயனாகவா நினைப்பது. போர் நடந்து கனரக ஆயுதங்களால் மக்கள் தாக்கப்பட்டும், போர் முடிந்து விட்டது, தன் சார்பு  ஊடகங்கள் மூலமாக பரப்பி மக்களை மாக்களாக வைத்திருக்க முயற்சி செய்யும் மு.கவை விமர்சிக்க நா ஏன் வருந்துகிறது? அதற்கு முதல் நாள் வரை... அப்படித்தான் போர் என்றால் சாவார்கள் – சகஜமாம். கேலி செய்யவில்லையா? தமிழனைக் கொல்லுவது சிங்களவர் நோக்கமல்ல! கூறியது யார்? மறந்து விட்டீரோ? சதிக்குத் துணைபோன லலிதா சந்திரமதியானது எப்போது? போரென்றால், சாகத்தான் செய்வார்கள். மழைநின்ற பின்பு தூவானம் விழுவது போல குண்டடிப்பட்டு சாகத்தான் செய்வார்கள். என்ன திமிர் எவன்/எவள் சொல்லக்கேட்டாலும் உண்மையான இனவுணர்வு கொண்டவனுக்கு செருப்பெடுத்து அடிக்கத்தானே தோன்றும்... இந்த சொற்களை உதிர்தது தமிழகக் கொள்ளைக்கூட்டணியான ஜெ-கருணா(நிதி) கூட்டணிதானே. இதை அறிவதற்கு பேரறிவு வேண்டாம்! சிற்றறிவும் போதுமே – ஒரு சொடுக்கில் அறியலாமே! சந்தர்ப்பவாதம் தானாம்! ஆனாலும் சந்திப் பிழையில்லாமல் சரணமடையத் தயார்தானாம்! தமிழன் விழுந்த இடத்திலேயே விழுந்து கொண்டா இருக்க வேண்டும்? அறிவு பற்றியெல்லாம் பேசும் நிலையிலா நம் இனத்தை, தாய் தமிழகத்தை வைத்திருக்கிறது? இந்த ஜெ-கருணா கூட்டணி. 5 வருடம் நீ, 5 வருடம் நான் என்று கொள்ளையடிக்கும் கூட்டம், மக்கள் போராட்டத்தை ஒடுக்கவதில் மட்டும் கூட்டு வைத்திருக்கிறது. ஆதிக்க ஆளும் வர்க்கம், இவர்களில் பாப்பாத்தி கூட சேருபவன் மட்டும் சந்தர்ப்பவாதி, கருணா கூட சேருபவன் கொள்கை யோக்கியன் என்று சொன்னால், எப்படி எந்த புரத்தில் நம்புவது. தமிழன் விழுந்த இடத்திலேயே விழுவதற்கு காரணம், அவன் கால்களை வாறுவதில் இந்த ஓட்டுபொறுக்கி நாய்களோடு சேர்ந்து முற்போக்குவாதிகள் என்னும் போர்வையில்  போலி கம்யுனிஸ்டுகள் போல எம் மக்களின் கால்களை இழுப்பதுதானே காரணம். விடிவுதான் எப்பொழுது? விபீஷணர்க்கு முடிவேது? ஆரியம் நடமாடும் நாசம் வேண்டாமப்பா பாசம் கெடுத்திடுமே அந்தக் காசம்! கீர்த்திமிகு அண்ணா ஆரிய மாயையில் தீட்டிய தூரிகைச் சித்திரமிது! மறந்தீரா மறத்தமிழரே? மயக்கத்தில்தான் வீழ்ந்தீரா? சிரிப்பிலே சொக்காதே சிலந்திமொழி அது வென்ற சொக்கத் தமிழிலே சொன்னாரே மேலும் அண்ணா! திராவிடம் பேசியவர்கள் இன்று இந்திய தேசியம் பேசிச் செய்யும் பித்தலாட்டங்களை நம்பி நாங்கள் எப்படி எங்களை ஒப்புக் கொடுப்பது, பெரியாரியலை விழுங்கி நிர்வாண நடனமாடும் திராவிட பேய்கள், பெரியாரை மறக்கடிக்க செய்யும் பித்தலாட்டம் கொஞ்சமா. அண்ணா பெரியாருக்கு அருகிலிருந்து துரோகம் செய்தார், கருணாநிதி பெரியார் திடலுக்கு அருகில் நின்று பெரியாரியலுக்கும் தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார். இவர் நோக்கம் பெரியாரியலை பரப்புவது அல்ல, பெரியாரியலை விழுங்குவது என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகிறோம்.

சாதி அரசியலை வலுப்படுத்திய இந்த அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்க பெரியாரை துணைக்கு அழைப்பது பெருங்குற்றம் ஐயா! கிளிப்பிள்ளைக்குப் பாடம் போல் கற்பித்தாரே கறுஞ்சட்டைத் தந்தை காற்றோடு போய்விட்டதா கண் மூடிப் போனதேன்? சிந்திப்புச் சீப்பினை எங்கே ஒளித்து வைத்தீர்? மீண்டும் மீண்டும் கொஞ்சம் அலுப்புதான் தட்டுகிறது. பெரியார் கற்பித்ததை பற்றி மற்றவர்களிடம் கேட்கும் நீங்கள் முந்தானைக்குள் பெரியாரியல் தேடிய காலத்தால், களத்தில் உள்ள தோழர்கள்  உணரும் நெருடல், இன்னும் கேட்கும், சந்திக்கும் விமர்சனங்கள்... கிளிப்பிள்ளைக்குப் பாடம் போல் கற்பித்தாரே கறுஞ்சட்டைத் தந்தை காற்றோடு போய்விட்டதா கண் மூடிப் போனதேன்? இன்னும் ஒரு பெரியார் வந்து இடித்துச் சொல்ல வேண்டுமா? இன்னும் ஒரு அண்ணா தோன்றி ஏளனம் செய்ய வேண்டுமா? இன்னும் ஒரு புரட்சிக்கவி பிறந்து சூட்டுக்கோல் போட வேண்டுமா? “பெரியார் இருந்திருந்தால் தமிழை சொல்லி தமிழனை ஏமாற்றிய கயவர்களை அம்பலப்படுத்தியிருப்பார். திராவிடத்தை முன்னேற்றிய கதையை கிழிந்தெறிப்பார்” என்று கற்பனைக்குள் வாழ வேண்டிய சூழல் எங்களுக்கு பெரியாரின் நூல்களுக்கு உரிமைக் கொண்டாடும் அன்பர்கள், பெரியாரின் சிலையை சேதப்படுத்திய கயவர்களை எத்தனை கைது செய்தார், இந்த பெரியாரின் தொண்டர்.(மு.க-வை மட்டும்தான் சொன்னேன்..மற்றவர்களை சொல்லவில்லை). இன்றிருந்தால் இந்த கயவர்களை கண்டு மீண்டும் அந்த புரட்சி பாவலன், முத்துக்குமரனின் இறுதி நிகழ்வில், தமிழர்களை நோக்கி பாடியிருப்பான். “கொலை வாளினை எடடா...”என்றே முழங்கியிருப்பான, இன உணர்வை ஊட்டியிருப்பான்.

தமிழன் கண்ட கால்வாயை ராமன் பெயரைச் சொல்லி தடுத்த பிறகும். தமிழன் தோல் கடித்துக் கிடக்க வேண்டுமோ! தீ பரவட்டும் என்றாரே அண்ணா எதன்மீது? அந்த ராமன்மீது தானே? அந்த ராமனைத் தூக்கி வந்து தமிழன்மீது மொத்தியபிறகும் சொரணை வரவில்லையா! சுப்பிரமணியசாமியை மொத்தி எடுத்தபோது வந்த கோபம், இராமனின் விமர்சனத்திற்கு வந்த வடவர் எதிர்ப்பு கண்டதும் அடங்கிப்போனதே! ஈழமக்களுக்கு போராடிய வழக்குறைஞர்களை மொத்தி எடுக்க முனைந்த தடி பெரியாரின் தடியாக இருக்க முடியுமா! தடி பிடிக்கும் வயதில் இருக்கை(சீட்) பிடிக்க திரியும் இனமான விற்ற கயவர்களின் கையில் பெரியாரின் அரிச்சுவடி கூட இருந்திருக்குமா?  இராமன் பெயரிலாவது திட்டத்தை நிறைவேற்றுங்கள், என் குடும்பம் கொள்ளையடிக்க வேண்டும் என்று இரைஞ்சும் நிலை பெரியாரியலின் போர்க்குணத்திற்கு  நேர்ந்த அவலமன்றி வேறென்ன. தன்மானம் போனதெங்கே? தமிழருக்கான திட்டத்தினை ரத்து செய்வேன் என்று அறிக்கை கொடுத்து அதே தமிழர்களிடம் வாக்குக் கேட்டு வரத்தைரியம் கொடுத்தோர் யார்? நீங்கள் கொடுத்த தைரியம் நீட்டி முழங்குகின்றார். சுக்கரீவர்கள் சிரஞ்சீவிகளா? அனுமார்கள் ஆயுள் நீடிப்பா? தன்மானம் விற்று சோனியா காலில் விழுந்து கிடப்பதுதான் தன்மானம் இனமானம் என்கின்றாரோ என்னவோ! தமிழர்களிடம் வாக்கு கேட்டுவரும் பார்ப்பன பாசிச பேய் தமிழன் கால்வாய் திட்டத்தை ரத்து செய்வேன் என்கின்ற பொழுது துள்ளும் மான் குஞ்சுகளுக்கு, ரத்து செய்வேன் என்று சொன்னதற்கு தமிழன் கிளர்தெழுந்திருக்க வேண்டும். ஆனால், தமிழனால் முடியாது, அவனை மானங்கெட்டவனாக உருவாக்கி வைத்திருக்கிறது இந்த அமைப்பு, சுயநலவாதியாக மாற்றி வைத்திருக்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம், கல்வி அமைப்பு. என்ன தொலைநோக்கு பார்வையோடு இந்த அதிகார வர்க்கம் மக்கள்நலனோடு சிந்தித்தது. நாம் என்ன வலியிருத்து சாதித்தோம். நாம் இந்த 5 ஆண்டுகள் என்ன செய்தோம்.

மோடியை அழைத்து வந்து மூச்சுமூட்ட விருந்து படைத்தாரே முகவரியைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? மோசம் போவது என்று முடிவா? பாப்பாத்தி நானென்று சட்டப் பேரவையிலே சதுராடிக் காட்டியவர் தாயாகி விட்டாரா? தலைப்பெழுத்தே மாறியதா தமிழனுக்கு? அதே சட்டப் பேரவையிலே இது சூத்திரர்களின் அரசென்று பிரகடனம் செய்தாரே – அவர் உங்கள் அகராதியில் துரோகியா? இதுநாள் வரை போதாது, இன்னும் சூத்திரனாக பார்ப்பன, பனியா கும்பலுக்கு …. மகனாக இருக்கச் செய்வதற்குதானே சோனியா கும்பலோடு கூட்டணி. இதை சட்டபேரவையில் பிரகடனம் செய்து வேறு அறிவிக்க வேண்டுமா? மோடி எதிர்க்கும் நாம் வாஜ்பாய் கும்பலையும் எதிர்க்கிறோம். ஆனால், வாஜ்பாயுடன் தேனிலவு கொண்டாடிவிட்டு இப்பொழுது “மதவாதம், மதவாதம்”என்று கூக்குரலிடும் இந்த கயவர்கள் துரோகிகளல்லாமல் வேறு யார்?

மீண்டும் சொல்கிறோம்... ஜெயலலிதா எதிரி? கருணாநிதி துரோகி? மீண்டும் மனுதர்மமா? நீங்கள் கொடியா, கயிறா? பழி சுமக்காதீர்கள் பரிகசிக்கப்படுவீர்கள். தவறு செய்யாதீர்கள் தரமிழந்து போவீர்கள்! செந்தட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவனுக்கு எதிராக வன்கொடுமை, ஆதிக்க சாதி இந்துக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனுதர்மம் ஏதோ ஜெயலலிதாவின் கைகளில் மட்டும்தான் இருக்கின்றது போலவும் கருணாநிதியின் முழுநேர மனுஎதிரி போல சித்தரிப்பதும் எதற்கு? உத்தபுரத்தில் சாதி இந்துக்களிடம் மென்மையான அணுகுமுறையை கையாண்டதன் பெயரென்ன, மனுதர்மத்தின் நவீன வடிவமல்லாமல் வேறென்ன? தீண்டாமை சுவற்றை முழுமையாக நீக்காமல் ஓட்டுக்கு, ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்ட தத்துவத்தின் பெயர் மனுதர்மமா? பெரியாரியலா? பார்ப்பானுக்கு மென்மையான தண்டனை கொடுப்பது, அதாவது அடித்தாலும் வலிக்கக்கூடாது என்பது இது மனுதர்மம்தான் என்று என் சிற்றரிவு கூறுகிறது உங்களுக்கு எப்படியோ!

பெரியார் வெறும் உச்சாடனமல்ல! அது ஒரு நுண்ணாடி! நுணுகிப் பாருங்கள். ஆரியக் கிருமிகளின் அசைவுகள் தெரியும். படம் எடுக்கும் பாம்புகூட அழகு அழகுதான்! பாஷாணம் அதன் பல்லில்! பகுத்தறிவு இப்போது பயன்படவில்லையென்றால் வேறு எப்போது? ஆட்டம் முடிந்த பிறகா? அப்போதும்கூட கருமாதிக்கும் வருவான் - மீதி மிச்சத்தைச் சுரண்டிப் போக! எச்சரிக்கை! எச்சரிக்கை! பெரியார் உச்சாடனமல்ல, ஆனால், அப்படித்தான் ஆக்கிவிட்டனர் இந்த ஆளும் வர்க்கத்தினர். பெரியாரின் கொள்கையை சொல்லி கருணாநிதி ஓட்டுக் கேட்கட்டுமே பார்க்கலாம். முடியாது என்பதல்ல இதன் பதில். கருணாநிதி கூட்டம் விரும்பாது என்பதுதான் அது. கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு போன்றவைகளை வெற்று தாளில் பதித்து விட்டு, கோயிலுக்கு கும்பாபிசேகம், ஆதிக்க சாதியின் நாயனின் பெயரை விமானநிலையத்துக்கு சூட்டுவது என பார்ப்பனீயத்திற்கு நவீன வடிவம் கருணாநிதி, பழைய வடிவம் ஜெயலலிதா.

ஜெயா-கருணா மற்றும் ஜால்ரா கூட்டுக்களவானிகளை மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி, மக்களோடு புரட்சிகர அமைப்புகள்  அருகிச் செல்வதே, நம்முடைய அவலநிலையை களையும் வழி. இந்த தேர்தலில் காங்கிரசு தோற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் தோழர்கள், நெடிய பயணம் காத்திருக்கிறது என்பதை உணர வேண்டும். ஒரு அமைப்பு சார்ந்திருக்கின்ற காரணத்தினாலேயே, லாலி பாடுவதை நிறுத்த வேண்டும், சுய சிந்தனை தெளிவு வேண்டும். தவறென்றால் திருத்தம் செய்ய தயங்கக்கூடாது, இது எனக்கும் பொருந்தும். பார்ப்பனீய, பனியா கும்பல் நம் முதுகில் ஏறி மிதித்து நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது, மேலும் அடிமையாக்க முனையும் நம் இனத்தின் மொத்த விடுதலைக்கு போராட தயாராக வேண்டும். மீண்டும் சந்திப்போம்.

- மகிழ்நன்