6 மே, 2008

வ ணக்கம்

1 கருத்து:

ilayamalar சொன்னது…

நண்பர் கஜினியின் கதை

நானும்,கஜினியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.இவர்களுடன் கண்ணன் என்ற நண்பரும் எங்களுக்கு உண்டு.
நாங்கள் மூவரும் ஒன்றாக மாலை உணவு உண்போம்.ஒரு நாள் நான் உண்ணும்போது குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது.
நண்பர் கண்ணன் தான் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்ததால்..ஒரு பாட்டில் தண்ணீரை எனக்கும் கொடுத்து விட்டார்.
நான் மூடியை திறந்து..குடிக்கும் போது ..என்ன நினைத்தாரோ கண்ணன்..என்னைக் குடிக்கக் கூடாது என்று சொன்னார்.
கண்ணனின் ஊரை சேர்ந்த கஜினி உடனே 'அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு..அதை அவர் குடிக்கக்கூடாது'என்று
சொல்வது என்ன நியாயம் என்றார்.கண்ணனோ பிடிவாதமாக இருக்க..எனக்கோ தண்ணீர் இல்லாமல் நா வறட்சி ஏற்பட..
என் நிலை உணர்ந்த கஜினி'டேய்..கண்ணா..அவர் தண்ணீர் இன்றி தவிக்கிறார்..நீ அவருக்கென்று கொடுத்த நீரை
அவர் குடிக்கக்கூடாது என்பது என்ன நியாயம்.உன்னைப் போல தடுப்பவர்களை உதைத்தால் என்ன..என்றார்.நானோ
தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டேன்.
இது நடந்து சில நாட்கள் ஆகிவிட்டன.இரு தினங்களுக்கு முன்..கண்ணனுக்கு ஒரு பொருளை வாங்கிவந்து....தான் அதற்கு
செலவு செய்ததை விட அதிக விலை வைத்து..விற்க முயன்றார்.கண்ணன் மறுத்துவிடப் போகிறானே என்ற எண்ணத்தில்
'உன்னை நான் உதைத்தால் என்ன..என்று அன்று பேசியது தவறு..இந்த பொருளை வாங்கிக்கொள்' என்றார்.
உடனே நான் 'அவரிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?'என்றேன்.
கஜினி செய்ய நினைப்பது..வியாபாரம்..அதில் நெளிவு..சுளிவுகள் உண்டு..அதனால் அவர் சொல்வது தப்பில்லை.
உனக்கோ கஜினியிடம் பற்று அதிகம்..அதனால்..அவர் சாதாரணமாக சொன்னது..அவர் நிலை தாழ்ந்து மன்னிப்புக்
கேட்டதாய் நீ நினைக்கிறாய்..அதனால் உன் மீதும் தப்பில்லை.
ஆனால்...தன் காரியத்தை மௌனமாக சாதித்துக் கொண்டிருக்கிறானே..கண்ணன் அவன் அதி புத்திசாலி..என
எங்கள் பொது நண்பர் கூறினார்.