
காதலின் சப்தம்
காதலின் சப்தத்தை
எழுதச்சொன்னாய்அதிகாலை என் ஜன்னலோரம்மெல்லிறகை அசைத்துப்பறந்தபுறாவின் சப்தமாகவோ
மெந்தூரலில் நுழைந்தாடும்காற்றின் சப்தமாகவோ
பெருங்கூட்டத்தில்சிதைந்தாடும் வார்த்தைக்குவியலின்கலவைச் சத்தமாகவோ
தீரா வெயிலின் நடைகளைப்பில்முதிர்கிழவியின் நிழல்கண்டஆசுவாச அனுபவிப்பின்சப்தமாகவோ
மலர்கூட்டம் புகுந்தாடும்சில்வண்டுகளின் சப்தமாகவோ
இதுவெதுமில்லாசிறுகுழந்தையின்முதல் அழுகை,முதல் முத்தச்சப்தமாகவே பட்டதெனக்கு....
-ரிஷி சேது (rishi_sethu23@rediffmail.com)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக