21 அக்டோபர், 2008


பொறுத்தது போதும்...


-அனாமிகா பிரித்திமா
தினமும்...
கவிதைகளை...
பிரசவிக்கிறேன்...
வேதனையோடு...
உங்கள் நினைவாய்…

குழந்தையை ...
பொத்தி பொத்தி ...
வைத்தேன்...
வளர்த்தேன்…

என் இதயத்தில்...
இன்று வரை…

பொறுத்தது போதும் ...
தவழ விடுகிறேன்…
எல்லாவற்றையும் …

அதையேனும் எடுத்து...
வளர்த்து விடுங்கள்...

நான்...
அணைந்து போகும் ...
முன்பு...
என் நினைவாய்…
-அனாமிகா பிரித்திமா

கருத்துகள் இல்லை: