

நன்றீ குமுதம்
உண்மையே கோவில் உண்மையாணவர்களே தெய்வம்
பதிவு செய்தவர்: suji பதிவு செய்தது: 20 Oct 2008 11:25 பம்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உணர்ச்சிக் கவிதை!
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்
உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே
வாய்த்த தலைவிதியா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
வெறுப்புணர்வை துறப்போம்: மகாத்மா காந்தி!
தமிழாக்கம் : கா. அய்யநாதன்
(வெள்ளையனே வெளியேறு போராட்டத் தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் நடப்பதற்கு முன்னர் மகாத்மா காந்தி ஆற்றிய உரை இது)
இந்த தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முன், நான் முன்வைக்கும் இரண்டு முக்கிய விடயங்களை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த நோக்கத்துடன் அதனை நான் முன்மொழிகின்றேனோ அதே நோக்கில் நீங்களும் அதனை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படி நான் கூறுவதற்குக் காரணம், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், அதனை எவ்வாறு நிறைவேற்றிட வேண்டும் என்று நான் விரும்புகின்றேனோ, அதன்படியே நீங்களும் செயல்படவேண்டும்.
இது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும். 1920ஆம் ஆண்டில் இருந்தது போலவே இப்பொழுதும் நான் இருக்கின்றேனா அல்லது என்னுள் மாற்றம் ஏதும் ஏறபட்டுள்ளதா என்று பலரும் என்னைக் கேட்கின்றனர். அப்படி நீங்கள் கேட்பதும் சரியே.
1920இல் இருந்ததுபோலவே, அதே காந்தியாகவே நான் இப்போதும் இருக்கின்றேன் என்பதை முதலிலேயே கூறிவிடுகிறேன். அடிப்படையி்ல் நான் எப்படியிருந்தேனோ அதில் எந்த மாற்றமும் இல்லை. அப்பொழுது எந்த அளவிற்கு நான் அகிம்சைக்கு முக்கியத்துவம் அளித்தேனோ அதே அளவிற்கு இப்பொழுதும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றேன். அகிம்சையின் மீதான எனது உறுதிப்பாடு ஓரளவிற்கு அதிகரித்திருக்கலாம். நான் அது தொடர்பாக அப்பொழுது எழுதியதற்கும், பேசியதற்கும் இப்போது அளிக்கும் இந்த தீர்மானத்திற்கும் எந்த முரண்பாடும் இல்லை.
இப்படிபட்ட அசாதாரண சூழ்நிலை ஒவ்வொருவரின் வாழ்விலும் எப்போதாவதுதான் உருவாகிறது. இந்த கணத்தில் நான் சொல்லுகின்ற, செய்துக்கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றிலும் நான் தூய்மையான அகிம்சையையே கடைபிடிக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த செயற்குழுவில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்திலும், அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய போராட்டமும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டவைதான். எனவே உங்களில் யாராவது அகிம்சையில் நம்பிக்கை இழந்திருந்தால் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதீர்கள்.
எனது நிலையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அகிம்சை எனும் விலை மதிக்கமுடியாத கொடையை இறைவன் எனக்கு அளித்துள்ளார். நானும், எனது அகிம்சையும் இப்போது சோதனைக்குள்ளாகியுள்ளோம். ஹிம்சையால் எரிந்துக்கொண்டிருக்கும் இந்தப் பூமி, தன்னை விடுவிக்குமாறு இறைஞ்சும் இந்த வேளையில் கூட நான் அகிம்சையை பயன்படுத்தவில்லையெனில் இறைவன் என்னை மன்னிக்கமாட்டார் என்பதோடு, எனக்கு அந்தக் கொடை தவறுதலாக அளிக்கப்பட்டதாகவே ஆகிவிடும். ரஷ்யாவும், சீனாவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள இந்த நிலையில் நான் தயங்கிக்கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, நான் செயல்பட்டாக வேண்டும்.
அதிகாரத்தைக் கைப்பற்ற அல்ல, இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்க வன்முறையற்ற வழியில் போராடுகிறோம். வன்முறைப் போராட்டத்தில் வெற்றிபெரும் தளபதி, இராணுவ புரட்சியின் மூலம் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகிறான். ஆனால், காங்கிரஸின் போராட்டமென்பது சாத்வீக வழியென்பதால் அங்கு சர்வாதிகாரத்திற்கு கொஞ்சமும் இடமில்லை. சாத்வீக வழியில் போராடும் வீரன் தனக்காக எதையும் பெறுவதில்லை, தனது நாட்டிற்கும், நாட்டின் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறான். இந்த நாடு விடுதலைப் பெற்றதற்குப் பிறகு யார் ஆளப்போகிறார்கள் எனபது காங்கிரஸின் கவலையல்ல. ஆட்சி அதிகாரம், அது எப்போது வந்தாலும், அது மக்களுக்கே உரியது. அதனை யாரிடம் அளிப்பது என்பதை மக்களே முடிவு செய்வார்கள். அது, நான் விரும்புவதுபோல, ஒரு பார்சியிடம் அளிக்கப்படலாம் அல்லது இன்றைக்கு நம்மில் எவரும் கேள்விப்படாத ஒரு பெயரைக் கொண்டவருக்கு போய் சேரலாம். அப்படிப்பட்ட நிலையில், “இந்த சமூகம் மிகச் சிறியது. அந்தக் கட்சி சுதந்திரப் போராட்டத்தில் எந்த வித்த்திலும் பங்குபெறவில்லை, அதனிடம் எதற்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும்” என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. அதன் துவக்க காலத்திலிருந்தே எந்தவிதமான சமூக (சாதி, மத) வண்ணத்தையும் ஏற்காமல் மிகச் சாதுரியமாக காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது. தேச அடிப்படையிலேயே அதன் சிந்தனையும், செயல்பாடும் இருந்து வருகிறது.
நாம் கடைபிடித்துவரும் அகிம்சை குறையுடையது என்பதும், அதன் முழுமையான நோக்கிலிருந்து நாம் எவ்வளவு தூரத்திலிருக்கின்றோம் என்பதும் எனக்கு தெரியும் என்றாலும், அகிம்சையைப் பொறுத்தவரை இறுதி வெற்றி என்பதோ தோல்வி என்பதோ இல்லை. குறைபாடுகள் இருந்தாலும், பெரிதாக ஏதாவது நடக்குமானால் அது நாம் கடந்த 22 ஆண்டுகளாக அமைதியாகவும், விடாப்பிடியாகவும் கடைபிடித்துவரும் ஒழுக்கத்திற்காக அதனை இறைவன் நமக்கு வழங்கியதாகவே இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
நமது நாட்டின் விடுதலைக்காக நாம் மேற்கொண்டுவரும் ஜனநாயக போராட்டத்தைப் போல வேறெந்த நாட்டிலும் நடைபெற்றதாக நான் உலக வரலாற்றில் கண்டதில்லை. சிறையில் இருந்தபோது பிரெஞ்ச் புரட்சியைப் பற்றி கார்லைல் எழுதிய புத்தகத்தைப் படித்தேன். ரஷ்யப் புரட்சியைப் பற்றி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்னிடம் விளக்கினார். என்னைப் பொறுத்தவரை, ஆயுதங்களைக்கொண்டு நடத்தப்படும் போராட்டம் ஜனநாயக லட்சியத்தை நிறைவேற்றுவதில் தோலவியுறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் விரும்பும் அந்த ஜனநாயகம் என்பது, வன்முறை தவிர்த்து சாத்வீக வழியில் நிலைநிறுத்தப்படும் ஜனநாயகமே அனைவருக்கும் சரிசமமான சுதந்திரத்தை பெற்றுத் தரும். ஒவ்வொருவரும் அவரவருக்கு எஜமானன்தான். அப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கே நான் உங்களை அழைக்கின்றேன். இதனை நீங்கள் அடையும்போது இந்து, முஸ்லீம் என்ற வேறுபாடுகளை மறந்துவிடுவீர்கள், இந்தியர்களே நாம் என்ற எண்ணத்துடன் அனைவரும் இணைந்து விடுதலைக்காக போராடுவீர்கள்.
அடுத்தபடியாக வெள்ளையர்கள் மீதான நமது மனப்பான்மை குறித்த கேள்வி எழுகிறது. நமது மக்களிடையே வெள்ளையர்களின் மீது ஒரு வெறுப்புணர்ச்சி உள்ளதை நான் கவனித்துள்ளேன். அவர்களின் நடத்தையால் தாங்கள் வெறுப்படைந்திருப்பதாகக் கூறுகின்றனர். வெள்ளைய (பிரிட்டிஷ்) ஏகாதிபத்தியத்தையும், வெள்ளையர்களையும் அவர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். அவர்களிடமுள்ள இந்த வெறுப்புணர்ச்சி ஜப்பானியர்களை வரவேற்பதற்குக்கூட காரணமாகிவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஒரு அடிமைத்தனத்திற்குப் பதிலாக மற்றொரு அடிமைத்தனத்திற்கு ஆளாக்கிவிடும். இந்த வெறுப்புணர்ச்சியை நாம் துறந்திட வேண்டும். வெள்ளைய ஏகாதிபத்தியத்தியத்தோடுதான் போராடுகிறோம், வெள்ளையர்களோடு நமக்கு எந்தத் தகராறும் இல்லை. இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெள்ளையர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்ற நமது கோரிக்கை அவர்கள் மீதான சினத்தின் பார்பட்டதல்ல. இன்று நிலவும் சிக்கலான சூழ்நிலையில் இந்தியா அதன் பங்களிப்பை செவ்வனே செய்யவேண்டும். ஐக்கிய நாடுகள் நடத்திவரும் இந்தப் போரில் இந்தியாவைப் போன்றதொரு மாபெரும் நாட்டிடமிருந்து வஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவும் பணத்தையும், பொருளையும் பெற்றுக்கொள்வது மகிழத்தக்க நிலையல்ல. சுதந்திரமற்ற நிலையில் எமது மக்களிடமிருந்து உண்மையான தியாக உணர்வையும், வீரத்தையும் தட்டி எழுப்ப முடியாது. நாம் முழு அளவிற்கு தியாகம் செய்யும் நிலையில் நமக்கு கிடைக்கப்போகும் விடுதலையை வெள்ளைய அரசால் தடுத்துவிட முடியாது. எனவே நம்மிடமுள்ள வெறுப்புணர்ச்சியை முழுமையாகத் துறந்திட வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒருபோதும் வெறுப்புணர்ச்சியை உணர்ந்ததில்லை. உண்மையைக் கூறுவதெனில், நான் முன் எப்போதையும் விட இப்பொழுதுதான் வெள்ளையர்களின் மிகச் சிறந்த நண்பனாக உள்ளேன். அதற்கு அவர்கள் இன்றுள்ள துயரமான நிலையும் ஒரு காரணம். என்னிடமுள்ள அந்த நட்புணர்வு அவர்களின் தவறுகளில் இருந்து அவர்களை மீட்கச் சொல்கிறது. இப்பொழுது நிலவும் சூழலில், அதள பாதாளத்தின் விளிம்பில் அவர்கள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். எனவே, அந்த ஆபத்து குறித்து அவர்களை எச்சரிப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இதற்காக அவர்கள் என் மீது ஆத்திரப்படலாம், அவர்களுக்கு உதவ நான் நீட்டும் நட்புக் கரத்தை துண்டித்துவிடவேண்டும் என்று கூடக் கருதலாம். என்னைப் பார்த்து மக்கள் நகைக்கலாம், ஆயினும் இதுவே எனது நிலை.அடுத்தபடியாக வெள்ளையர்கள் மீதான நமது மனப்பான்மை குறித்த கேள்வி எழுகிறது. நமது மக்களிடையே வெள்ளையர்களின் மீது ஒரு வெறுப்புணர்ச்சி உள்ளதை நான் கவனித்துள்ளேன். அவர்களின் நடத்தையால் தாங்கள் வெறுப்படைந்திருப்பதாகக் கூறுகின்றனர். வெள்ளைய (பிரிட்டிஷ்) ஏகாதிபத்தியத்தையும், வெள்ளையர்களையும் அவர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். அவர்களிடமுள்ள இந்த வெறுப்புணர்ச்சி ஜப்பானியர்களை வரவேற்பதற்குக்கூட காரணமாகிவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஒரு அடிமைத்தனத்திற்குப் பதிலாக மற்றொரு அடிமைத்தனத்திற்கு ஆளாக்கிவிடும். இந்த வெறுப்புணர்ச்சியை நாம் துறந்திட வேண்டும். வெள்ளைய ஏகாதிபத்தியத்தியத்தோடுதான் போராடுகிறோம், வெள்ளையர்களோடு நமக்கு எந்தத் தகராறும் இல்லை. இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெள்ளையர்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்ற நமது கோரிக்கை அவர்கள் மீதான சினத்தின் பார்பட்டதல்ல. இன்று நிலவும் சிக்கலான சூழ்நிலையில் இந்தியா அதன் பங்களிப்பை செவ்வனே செய்யவேண்டும். ஐக்கிய நாடுகள் நடத்திவரும் இந்தப் போரில் இந்தியாவைப் போன்றதொரு மாபெரும் நாட்டிடமிருந்து வஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவும் பணத்தையும், பொருளையும் பெற்றுக்கொள்வது மகிழத்தக்க நிலையல்ல. சுதந்திரமற்ற நிலையில் எமது மக்களிடமிருந்து உண்மையான தியாக உணர்வையும், வீரத்தையும் தட்டி எழுப்ப முடியாது. நாம் முழு அளவிற்கு தியாகம் செய்யும் நிலையில் நமக்கு கிடைக்கப்போகும் விடுதலையை வெள்ளைய அரசால் தடுத்துவிட முடியாது. எனவே நம்மிடமுள்ள வெறுப்புணர்ச்சியை முழுமையாகத் துறந்திட வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒருபோதும் வெறுப்புணர்ச்சியை உணர்ந்ததில்லை. உண்மையைக் கூறுவதெனில், நான் முன் எப்போதையும் விட இப்பொழுதுதான் வெள்ளையர்களின் மிகச் சிறந்த நண்பனாக உள்ளேன். அதற்கு அவர்கள் இன்றுள்ள துயரமான நிலையும் ஒரு காரணம். என்னிடமுள்ள அந்த நட்புணர்வு அவர்களின் தவறுகளில் இருந்து அவர்களை மீட்கச் சொல்கிறது. இப்பொழுது நிலவும் சூழலில், அதள பாதாளத்தின் விளிம்பில் அவர்கள் இருப்பதாகவே நான் உணர்கிறேன். எனவே, அந்த ஆபத்து குறித்து அவர்களை எச்சரிப்பது எனது கடமை என்று கருதுகிறேன். இதற்காக அவர்கள் என் மீது ஆத்திரப்படலாம், அவர்களுக்கு உதவ நான் நீட்டும் நட்புக் கரத்தை துண்டித்துவிடவேண்டும் என்று கூடக் கருதலாம். என்னைப் பார்த்து மக்கள் நகைக்கலாம், ஆயினும் இதுவே எனது நிலை.